INDIAN 7

Tamil News & Polling

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அரசியல் கருத்து கணிப்பு விளையாட்டு சினிமா விடுகதைகள் நடிகைகள்

மாரி செல்வராஜுக்கு தலைவலியாக மாறிய பகத் பாசில்!

மாரி செல்வராஜுக்கு தலைவலியாக மாறிய பகத் பாசில்!
ஜூலை 31, 2023 | 04:32 am | Views : 56

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம் என்பதால் இதனை பிரம்மாண்டமாக உருவாக்கி இருந்தனர். குறிப்பாக வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள் ஏராளமானோர் நடித்திருந்தனர். அதோடு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.



இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக இயக்குனர் மாரி செல்வராஜ், மாமன்னன் பட ஆடியோ லாஞ்சில் கமல் முன்பே தேவர்மகன் படத்தை விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இப்படத்தில் தான் தேவர்மகன் படத்தில் வரும் இசக்கி கேரக்டரை வைத்து தான் எடுத்துள்ளேன் என்றும் கூறி இருந்தார். இதனால் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது மாமன்னன்.



இதன்பின்னர் படம் கடந்த ஜூன் 29-ந் தேதி ரிலீஸ் ஆன பின்னர், படத்தை பார்த்த ஏராளமானோர் இது முன்னாள் சபாநயகர் தனபாலின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை படமாக்கி இருப்பதாக கூறினர். ஒருசிலரோ இது திருமாவளவனை பற்றியது என்றும் ஒப்பிட்டு பேசினர். இறுதியாக சமூக நீதி மற்றும் சமத்துவம் பற்றி நேர்த்தியாக அரசியல் பேசிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.72 கோடி வசூலித்து இருந்தது.



வழக்கமாக ஒருபடம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி 28 நாட்களுக்கு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும். அந்த வகையில் மாமன்னன் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன 28 நாட்கள் கழித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 27-ந் தேதி ரிலீஸ் ஆனது. ஓடிடியிலும் மாமன்னன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் தான் தற்போது நெட்பிளிக்ஸில் இந்தியளவில் அதிகம் பார்க்கப்படும் படமாக உள்ளதோடு, டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளது.





இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மாமன்னன் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் அது சமூக வலைதளங்களில் வேறு விதமாக டிரெண்டாகி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மாமன்னன் படத்தில் சாதி வெறி பிடித்த வில்லன் கதாபாத்திரமான ரத்னவேலு என்கிற கேரக்டரில் பகத் பாசில் நடித்திருந்தார். அவரின் கேரக்டர் சற்று மாஸ் ஆனதாக காட்டப்பட்டு இருக்கும்.

தற்போது அந்த கொடூர வில்லன் கதாபாத்திரத்தை ஹீரோ போல் சித்தரித்து இணையத்தில் பதிவிடப்படும் மீம்ஸ் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அவரது கேரக்டருக்கு எந்தப் பாடல் போட்டாலும் செட் ஆகிறது எனக் கூறி விதவிதமான பாடல்களை போட்டு பகத் பாசில் கேரக்டரை கொண்டாட தொடங்கி உள்ளனர்.

இந்த எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் எல்லாம் பார்க்க நன்றாக இருந்தாலும், அதன்பின்னணியில் இருக்கும் ஆபத்து தான் தற்போது பேசு பொருள் ஆகி உள்ளது. இந்த வீடியோவை பல்வேறு சாதியை சேர்ந்தவர்களும், தங்கள் சாதி பெருமை பேசும் பாடல்களோடு எடிட் செய்து வருவதால், இது இளம் தலைமுறையினர் மத்தியில் சாதிவெறியை தூண்டிவிடுமோ என்கிற அச்சமும் எழத் தொடங்கி உள்ளது.

சிலரோ பகத் பாசில் போன்ற ஒரு தரமான நடிகரை வில்லனாக நடிக்க வைத்தால் இதுதான் பிரச்சனை என பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் மாமன்னன் படம் மாரி செல்வராஜுக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.

Keywords: FAHADH FAASIL மாமன்னன் மாரி செல்வராஜ் வடிவேலு பகத் பாசில் கீர்த்தி சுரேஷ்

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

விடுகதை :

வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


விடுகதை :

ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?


விடுகதை :

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

2024-07-25 03:11:28 - 1 day ago

திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
கடந்த 2020-ம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் பேசியிருந்தார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் மீது


பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!

2024-07-22 03:40:09 - 4 days ago

பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!
பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய,


நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்

2024-07-22 01:51:11 - 5 days ago

நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்
கடலூர்,கடலூரில் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சினிமா படங்களில் 2-ம் பாகம் தோல்வியடைவது குறித்து கருத்து கேட்கிறீர்கள். மக்களின் ரசனைக்கு ஏற்றபடி படம் இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள். அந்த படங்கள் தான் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? 2 ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. கடந்த அரசும்,


அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு

2024-07-22 01:48:42 - 5 days ago

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2024-07-16 11:19:19 - 1 week ago

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் நெற்குணம் கிராமத்தில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது சிறுமிகளை கடந்த 2017


குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!

2024-07-16 09:44:26 - 1 week ago

குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!
குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். 1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த


நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

2024-07-16 08:52:54 - 1 week ago

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.


மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

2024-07-16 08:00:54 - 1 week ago

மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக,


Follow Me

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.