சாதிய பிரிவினைகளை தூண்டும் மாரி செல்வராஜ் - கிருஷ்ணசாமி குற்றசாட்டு!

ஆகஸ்ட் 08, 2023 | 04:17 am | views : 380
மாமன்னன் படம் வெற்றிகரமாக ஓடியுள்ள நிலையில், அதுகுறித்த சர்ச்சைகளும், பரபரப்புகளும் இன்னும் அடங்கவில்லை.. படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இது தொடர்பான சர்ச்சைகள் கிளம்பிவிட்டன.
உதயநிதி - வடிவேலுவின் சீன்களை வரவேற்று, சோஷியல் மீடியாவில் மீம்ஸ்கள் தெறிக்கவிடப்பட்டன. ஆனால், இதுவே, அடுத்த சில நாட்களில் தலைகீழாக மாறிவிட்டது. ரத்தினவேலுவாக நடித்த பகத் பாசிலை சில சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்
சோஷியல் மீடியா முழுவதுமே, கடந்த சில நாட்களாகவே, பகத் பாசில் டிரெண்டாகிவிட்டார்.. தேவராகவும், கவுண்டராகவும், வன்னியராகவும் அந்தந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் ரத்தினவேல் சீன்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மிக முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, 'மாமன்னன்' திரைப்பட இசை வெளியிட்டு விழாவில் டைரக்டர் மாரி செல்வராஜ், சம்பந்தமேயில்லாமல், தேவர் மகன் படத்தை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். அதிலிருக்கும் கதாபாத்திரம்தான் மாமன்னன் படத்திலும் வந்திருக்கிறது என்றார்.
Also read... பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!
இது முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கம் கொண்டது... படம் எடுக்க எத்தனையோ கதைக்கருக்கள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு மறுபடியும், மறுபடியும் சாதியை வைத்துப் படம் எடுப்பது தேவையில்லாதது.. மாரி செல்வராஜ், நல்ல கதைகளை வைத்துப் படமெடுக்க வேண்டும்.. பகத் பாசில் கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பகத் பாசில் ஒரு சிறந்த நடிகர். ஆனால், மாமன்னன் படத்தில் அவர் நடித்த ரத்னவேல் பாத்திரத்தை தவறான நோக்கத்துடன் சாதிய பிரிவினைகளை தூண்டும் வகையில் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. இது தவறானது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். சாதிய வேறுபாடுகளையும் மோதல்களையும் உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ்கள், வீடியோக்களையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
![]() |
![]() |
![]() |
![]() |
ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும்,
தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது;
2019- ல் சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், நந்தியாலா போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்
முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன?
தேவர், அண்ணாதுரை... நடந்தது என்ன?
மதுரையில் கடவுளை பற்றி அண்ணாதுரை பேசியதும், அதற்கு தேவரின் எச்சரிக்கையும் தமிழக அரசியலில் மிக முக்கியமான வரலாறு.. இந்த செய்தியை பற்றி பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
இந்த வரலாறை பற்றி பேசிய அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்..
நான் பேட்டி எடுத்த பல
பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!
அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம்
9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை :
சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர்
திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை!
ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !..
உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.
பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு