Tamil News & polling
மதுரையில் நடைபெற்ற தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநாட்டில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார் எனக் கூறியுள்ளார்.
'என் மண், என் மக்கள்' யாத்திரையை கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடத்தி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நாளை நிறைவு பெறுகிறது. இந்நிலையில், மதுரை மேற்கு தொகுதியில் நேற்று நடைபயணத்தில் பங்கேற்றார் அண்ணாமலை. அதைத்தொடர்ந்து, மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற தென்னிந்திய பார்வர்டு பிளாக் தேச ஒற்றுமை தென்மண்டல மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அண்ணாமலை, "இந்திய அளவில் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தேவைப்படுகிறார். இந்த மண்ணில் ஜாதி அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியல், அடாவடித்தனமான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நான்கையும் அழிக்க நமக்கு தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் ஐயா என்ற மருந்து மீண்டும் தேவைப்படுகிறது.
முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் மோடி: முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார். தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று சொன்னாரோ அதே பார்வையில் பயணிக்கக்கூடியவர் மோடி. சனாதனத்தைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் முத்துராமலிங்கத் தேவர் எப்படி வெகுண்டெழுந்து நிற்பாரோ அதேபோல சனாதன தர்மத்தைக் காக்கக் கூடியவராக நமது பிரதமர் மோடி இருக்கிறார். நேர்மையான அரசியலை செய்ய முடியும் என நிரூபித்த முத்துராமலிங்கத் தேவர் போல பத்து ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி புரிந்து வருகிறார். இருவரின் வாழ்க்கை குறிப்புகளையும் படித்தால், இருவருமே அச்சு அசலாக ஒரே பாதையில் பயணிக்கக் கூடியவர்கள் என்பது தெரியவரும்.
புதிய அரசியல் மாற்றம்: திமுகவினர் முத்துராமலிங்கத் தேவரை தவறாகப் பேசுவதையே பிழைப்பாக வைத்துள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கால் நகத்தின் தூசிக்கு கூட திமுகவினர் ஈடாக மாட்டார்கள். நாடாளுமன்றத்தில் தெய்வத்திருமகனார் தேவர் ஐயா சிலை, நமது முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் ஆட்சியில், அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் 2002 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
நமது பாரதப் பிரதமர் மோடியும், முத்துராமலிங்கத் தேவர் ஐயா மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு முதல் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தென் தமிழகத்தில் ஒரு திமுக நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட வெற்றி பெற மாட்டார்கள்.
டெல்லியில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போதை பொருளை கடத்தி கைதாகி உள்ளனர். திமுக விசிக ஆகிய கட்சிகளை கொள்கை கூட்டணி என்பதை விட கடத்தல் கூட்டணி என சொல்லலாம். 450 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தியாவில் பிரதமராக மீண்டும் மோடி வருவார். முத்துராமலிங்க தேவரின் வடிவில் இருக்கக்கூடிய பிரதமர் மோடியை தமிழக மக்கள் மீண்டும் பிரதமராக்க வேண்டும்" என அண்ணாமலை பேசியுள்ளார்.

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு
கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ்
நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு
ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக
விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக கனமழை தமிழக வெற்றிக் கழகம் சென்னை Chennai திருமாவளவன் அண்ணாமலை ADMK Annamalai பாஜக MK Stalin Tamil Nadu BJP AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு தீபாவளி வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி இந்திய அணி indian cricket team Seeman முக ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் TVK Conference Tamilaga Vettri Kazhagam தமிழ்நாடு Northeast Monsoon செங்கோட்டையன் TTV Dhinakaran Sengottaiyan மு.க.ஸ்டாலின் AMMK PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி மழை தவெக விஜய் VCK பாமக காங்கிரஸ் Edappadi Palaniswami தென்காசி Tirunelveli TVK Vijay IMD விடுமுறை மதுரை அமரன் பாலியல் தொல்லை விசிக திருச்செந்தூர் Udhayanidhi Stalin நயினார் நாகேந்திரன் வானிலை கைது தமிழக அரசு GetOut Stalin நடிகை கஸ்தூரி Ind vs Nz தனுஷ் திருநெல்வேலி திமுக அரசு GetOut Modi PM Modi Heavy Rain Congress தமிழகம் Ajith Washington Sundar M.K. Stalin rain Nainar Nagendran Thoothukudi வாஷிங்டன் சுந்தர் இந்தியா சட்டசபை தேர்தல் தூத்துக்குடி கோலிவுட் டிடிவி தினகரன்