Tamil News & polling
இந்தியாவுக்கு எதிரான 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஜூன் ஒன்பதாம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 120 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதனால் கண்டிப்பாக இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் வெல்லும் என்று அந்நாட்டவர்கள் உறுதியாக நம்பினர்.
ஆனால் சேசிங் செய்த அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடியாக விளையாட முடியாமல் திணறினர். அதனால் 20 ஓவரில் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் பரிதாபமாக தோற்று சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கேள்விக்குறியாக்கிக் கொண்டது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்தார்
இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிசப் பண்ட் 43, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்தனர். பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் 120 பந்துகளில் நிதானமாக விளையாடி சிங்கிள், டபுள் ரன்களாக எடுத்திருந்தால் கூட 120 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வென்றிருக்க முடியும் என்று சோயப் அக்தர் வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் தங்கள் வீரர்கள் யாருமே மூளையை பயன்படுத்தி விளையாடவில்லை என்று வருத்தத்தை தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு பந்துகளுக்கு நிகரான ரன்கள் எடுக்கும் எளிய வாய்ப்பு இருந்தது. முதலில் இந்திய அணி தங்களுடைய மிடில் ஆர்டரில் சொதப்பியது. 11 ஓவரில் 80 ரன்கள் எடுத்த இந்தியா எளிதாக எடுத்திருக்க வேண்டிய 160 ரன்களை தொடவில்லை”
“ஆனால் பாகிஸ்தானுக்கு அதை தொடுவதற்கு நெருங்கிய வாய்ப்பு இருந்தது. முகம்மது ரிஸ்வான் இன்னும் 20 ரன்கள் அடித்து பாகிஸ்தானை எளிதாக வெற்றி பெற வைத்திருந்திருக்கலாம். ஆனால் சோகம் என்னவெனில் நாம் நம்முடைய மூளையை பயன்படுத்தவில்லை. பாகிஸ்தான் அணியில் நிறைய கேள்விகள் இருக்கிறது. இந்தப் போட்டியை பாகிஸ்தான் வென்றிருக்க வேண்டும்”
“கடைசி 47 பந்துகளில் வெறும் 46 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது பஃகார் ஜமான் களத்தில் இருந்த நிலையில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை வைத்திருந்தது. ஆனாலும் நம்மால் அதை எடுக்க முடியவில்லை. அதனால் நான் வார்த்தைகள் இன்றி மிகவும் உடைந்துள்ளேன். அவ்வளவு தான்” என்று கூறினார். அந்த வகையில் அமெரிக்காவிடம் தோற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது பரம எதிரி இந்தியாவிடமும் வீழ்ந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் Vijay Chennai சென்னை DMK TVK திமுக அண்ணாமலை தவெக Annamalai பாஜக அதிமுக BJP கனமழை Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி பழனிசாமி TTV Dhinakaran MK Stalin AIADMK திருமாவளவன் AMMK சீமான் ADMK மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு செங்கோட்டையன் Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் Thirumavalavan PMK முக ஸ்டாலின் Sengottaiyan Seeman வடகிழக்கு பருவமழை Congress Tamilaga Vettri Kazhagam சட்டசபை தேர்தல் கைது வானிலை ஆய்வு மையம் பாமக Edappadi Palaniswami