இந்தியாவுக்கு எதிரான 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஜூன் ஒன்பதாம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 120 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதனால் கண்டிப்பாக இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் வெல்லும் என்று அந்நாட்டவர்கள் உறுதியாக நம்பினர்.
ஆனால் சேசிங் செய்த அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடியாக விளையாட முடியாமல் திணறினர். அதனால் 20 ஓவரில் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் பரிதாபமாக தோற்று சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கேள்விக்குறியாக்கிக் கொண்டது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்தார்
அக்தர் சோகம்:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிசப் பண்ட் 43, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்தனர். பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் 120 பந்துகளில் நிதானமாக விளையாடி சிங்கிள், டபுள் ரன்களாக எடுத்திருந்தால் கூட 120 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வென்றிருக்க முடியும் என்று சோயப் அக்தர் வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் தங்கள் வீரர்கள் யாருமே மூளையை பயன்படுத்தி விளையாடவில்லை என்று வருத்தத்தை தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு பந்துகளுக்கு நிகரான ரன்கள் எடுக்கும் எளிய வாய்ப்பு இருந்தது. முதலில் இந்திய அணி தங்களுடைய மிடில் ஆர்டரில் சொதப்பியது. 11 ஓவரில் 80 ரன்கள் எடுத்த இந்தியா எளிதாக எடுத்திருக்க வேண்டிய 160 ரன்களை தொடவில்லை”
“ஆனால் பாகிஸ்தானுக்கு அதை தொடுவதற்கு நெருங்கிய வாய்ப்பு இருந்தது. முகம்மது ரிஸ்வான் இன்னும் 20 ரன்கள் அடித்து பாகிஸ்தானை எளிதாக வெற்றி பெற வைத்திருந்திருக்கலாம். ஆனால் சோகம் என்னவெனில் நாம் நம்முடைய மூளையை பயன்படுத்தவில்லை. பாகிஸ்தான் அணியில் நிறைய கேள்விகள் இருக்கிறது. இந்தப் போட்டியை பாகிஸ்தான் வென்றிருக்க வேண்டும்”
“கடைசி 47 பந்துகளில் வெறும் 46 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது பஃகார் ஜமான் களத்தில் இருந்த நிலையில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை வைத்திருந்தது. ஆனாலும் நம்மால் அதை எடுக்க முடியவில்லை. அதனால் நான் வார்த்தைகள் இன்றி மிகவும் உடைந்துள்ளேன். அவ்வளவு தான்” என்று கூறினார். அந்த வகையில் அமெரிக்காவிடம் தோற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது பரம எதிரி இந்தியாவிடமும் வீழ்ந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!