INDIAN 7

Tamil News & Polling

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அரசியல் கருத்து கணிப்பு விளையாட்டு சினிமா விடுகதைகள் நடிகைகள்

ரோஹித் சர்மாவின் மாஸ்டர் க்ளாஸ் தான் இந்தியாவை ஜெய்க்க வெச்சுது.. யுவராஜ் பாராட்டு

ரோஹித் சர்மாவின் மாஸ்டர் க்ளாஸ் தான் இந்தியாவை ஜெய்க்க வெச்சுது.. யுவராஜ் பாராட்டு
ஜூன் 10, 2024 | 01:13 pm | Views : 33

அமெரிக்காவில் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா சுமாராக செயல்பட்டு 119 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்று நம்பப்பட்டது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 20, ரிசப் பண்ட் 43 ரன்கள் எடுத்தனர். ஆனால் பந்து வீச்சில் துல்லியமாகவும் நெருப்பாகவும் செயல்பட்ட இந்திய பவுலர்கள் 20 ஓவரில் பாகிஸ்தானை 113/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். அதனால் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி இந்தியா சாதனை படைத்தது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றிக்கு முக்கியமான நேரத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் முக்கிய பங்காற்றினார். அதனாலேயே அவருக்கு ஆட்டநாயகன் விருதும் சமர்ப்பிக்கப்பட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் பும்ரா போன்ற பவுலர்களை சரியான நேரத்தில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா வெற்றியை தலைகீழாக மாற்றியதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ரோஹித் சர்மாவின் மாஸ்டர் கிளாஸ் கேப்டன்ஷிப் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக பாராட்டும் அவர் இந்தியாவின் வெற்றி பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை கொண்ட போட்டியில் இந்தியா த்ரில்லர் வெற்றி பெற்றுள்ளது. ரோகித் சர்மாவின் வியூகம் நிறைந்த மாஸ்டர் கிளாஸ் ஜொலிக்கிறது” “பவுலர்களை அவர் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஆட்டத்தை மாற்றினார். மறுபுறம் இந்தியாவின் அந்த துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தானின் பேட்டிங் திணறியது. இந்த வெற்றிக்கு இந்திய அணி மிகவும் தகுதியானது. ரிஷப் பண்ட் நன்றாக விளையாடினார். ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் நன்றாக பந்து வீசினர்” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல என்ன தான் பும்ரா நன்றாக பந்து வீசினாலும் அவரைப் போன்ற பவுலர்களை சரியான நேரத்தில் கச்சிதமாக பயன்படுத்தியது ரோஹித் சர்மாவின் திறமையாகும். இருப்பினும் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் கொண்ட அவருக்கு இது பெரியது கிடையாது என்றே சொல்லலாம். இதே வேகத்தில் அவருடைய தலைமையில் இந்தியா கோப்பையை வெல்வதே பெரிய விஷயமாக இருக்கும்.

Keywords: 2024 T20 WORLDCUP 2024 டி20 உலக கோப்பை IND VS PAK ROHIT SHARMA YUVRAJ SINGH இந்திய அணி பாகிஸ்தான் அணி யுவ்ராஜ் சிங் ரோஹித் சர்மா

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

விடுகதை :

சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?


விடுகதை :

தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?


விடுகதை :

அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?


இந்தியா இலங்கை டி20 தொடரை இந்த சேனலில் பார்க்கலாம்.. ஓசில பாக்க முடியாது!

2024-07-25 11:32:52 - 2 days ago

இந்தியா இலங்கை டி20 தொடரை இந்த சேனலில் பார்க்கலாம்.. ஓசில பாக்க முடியாது!
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையில் தற்போது இலங்கை நாட்டிற்கு சென்று அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அதன் பின்னர் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய


டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிச்சயம் படைப்போம் – இங்கிலாந்து வீரர் போப் பேட்டி

2024-07-25 03:07:33 - 2 days ago

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிச்சயம் படைப்போம் – இங்கிலாந்து வீரர் போப் பேட்டி
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம்


இந்திய அணியில் நிலையான இடமில்லை... அக்சர் படேல் பேட்டி

2024-07-22 01:47:16 - 5 days ago

இந்திய அணியில் நிலையான இடமில்லை... அக்சர் படேல் பேட்டி
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வென்றது. அந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினர். அதே போல ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் சிறந்த சுழல் பந்து


இலங்கை தொடரில் ருதுராஜ், சாம்சன் கழற்றி விடப்பட அவர் தான் காரணம்.!

2024-07-20 10:13:55 - 1 week ago

இலங்கை தொடரில் ருதுராஜ், சாம்சன் கழற்றி விடப்பட அவர் தான் காரணம்.!
இலங்கைக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அந்தத் தொடர்களில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக் குழுவும் கௌதம் கம்பீரும் புதிய கேப்டனாக


பாவம் பாண்டியா.. கம்பீர் தான் பாண்டியாவை கழற்றி விட்டுள்ளார்.. கம்பீரின் தவறை விமர்சித்த ஸ்ரீகாந்த்

2024-07-20 00:47:12 - 1 week ago

பாவம் பாண்டியா.. கம்பீர் தான் பாண்டியாவை கழற்றி விட்டுள்ளார்.. கம்பீரின் தவறை விமர்சித்த ஸ்ரீகாந்த்
விரைவில் துவங்கும் இலங்கை டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2022க்குப்பின் ரோஹித் ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட்டார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற


300 சிக்ஸர்களை அடித்த ஏழாவது இந்திய வீரர் சஞ்சு சாம்சன்!

2024-07-15 07:23:17 - 1 week ago

300 சிக்ஸர்களை அடித்த ஏழாவது இந்திய வீரர் சஞ்சு சாம்சன்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று ஹராரே நகரில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய அசத்தியது. இளம் வீரர்களை


முதல் பந்தில் அதிக ரன் எடுத்து ஜெய்ஸ்வால் மாபெரும் உலக சாதனை!

2024-07-14 17:26:49 - 1 week ago

முதல் பந்தில் அதிக ரன் எடுத்து ஜெய்ஸ்வால் மாபெரும் உலக சாதனை!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் 4 போட்டிகளில் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரைக் கைப்பற்றியது. அந்த சூழ்நிலையில் இந்த தொடரின் சம்பிரதாயக் கடைசிப் போட்டி ஜூலை 14ஆம் தேதி இந்திய


10 விக்கெட்ஸ்.. ஜிம்பாப்வே அணியை அசால்ட்டாக ஊதி தள்ளிய இந்தியா.. 8 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி

2024-07-13 18:08:33 - 1 week ago

10 விக்கெட்ஸ்.. ஜிம்பாப்வே அணியை அசால்ட்டாக ஊதி தள்ளிய இந்தியா.. 8 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி
ஜிம்பாப்வே நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த சூழ்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் நான்காவது போட்டி ஜூலை 13ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹராரே நகரில்


திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!


பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!


நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்


அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!


நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது


Follow Me

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.