கனடாவை திணறலாக வெற்றியை பெற்ற பாகிஸ்தான்..

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at ஜூன் 12, 2024 புதன் || views : 494

கனடாவை திணறலாக வெற்றியை பெற்ற பாகிஸ்தான்..

கனடாவை திணறலாக வெற்றியை பெற்ற பாகிஸ்தான்..

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 11ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 22வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதின. தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தோல்விகளை சந்தித்ததால் இப்போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் களமிறங்கியது.

அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் துவக்க வீரராக களமிறங்கி நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் நவ்நீத் 4, பர்க்கட் சிங் 2, நிக்கோலஸ் கிர்டோன் 1, ஸ்ரேயாஸ் மோவா 2, ரவீந்திரபால் சிங் 0 ரன்களில் அவுட்டாகி கனடாவுக்கு கை கொடுக்க தவறினர்.


அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் போராடிய ஜான்சனும் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 52 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஜாபர் 10, கலீம் சனா 13* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் கனடா 106/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 2, முகமத் அமீர் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். அதைத்தொடர்ந்து 107 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 6 (12) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் முகமது ரிஸ்வான் மீண்டும் நிதானமாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம் 2வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்து 33 (33) ரன்னில் அவுட்டானார். அப்போது வந்த பகார் ஜாமான் 4 ரன்கள் ஆட்டமிழந்தார். ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய முகமது ரிஸ்வான் 53* (53) ரன்கள் குவித்தார்.

இதையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த துவக்க வீரர் என்ற ரோகித் சர்மாவின் உலக சாதனையும் அவர் சமன் செய்தார். இதுவரை ரோகித் சர்மா மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவருமே தலா 30 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளனர். அதனால் 17.3 ஓவரில் 107/3 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


அதன் காரணமாக ஒரு வழியாக முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தற்காலிகமாக வைத்துக் கொண்டது. மறுபுறம் முடிந்தளவுக்கு போராடிய கனடா சார்பில் அதிகபட்சமாக டிலோன் ஹேய்லிகர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

2024 T20 WORLDCUP 2024 டி20 உலக கோப்பை CANADA MOHAMMED RIZWAN PAKISTAN CRICKET PAKISTAN TEAM கனடா பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வான்
Whatsaap Channel
விடுகதை :

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


விடுகதை :

உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?


விடுகதை :

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?


ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!

ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!


கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்


யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை

யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை


கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்


பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next