அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

Views : 1927

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி தற்போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றது.



சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது. விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு (C VijayaBaskar) சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு (Income Tax Raid) போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.



முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்டோர் மீது சோதனை நடத்தப்பட்டது தெரிந்துதே. அதன்படி தற்போது சி.விஜயபாஸ்கர் மீது சோதனை நடத்தப்படுகிறது.



நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு வெற்றி பெற்றதை அடுத்து சில அதிரடி முடிவுகளை திமுக அரசு அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் அதிமுக ஆட்சியில் சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர்கள் சிலர் குறி வைக்கப்பட்டுள்ளனர்.



அதன்படி முதல் படியாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டப்பட்டு அவரிடமிருந்து நிறைய ஆவணங்களும், கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டது. அடுத்ததாக அதிமுக முகமாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. இவரிடமிருந்து விலை உயர்ந்த கார்கள், வெளிநாட்டு கரன்சிகள், நகைகள் என பல கோடி மதிப்புள்ள பொருட்கள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டன.



இந்த நிலையில் தற்போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது ரெய்டு நடந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அவர் மீது நடந்து வரும் இந்த சோதனையில், அவருக்கு சொந்த நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.






JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 1 week ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்