தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில் : அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திர வெயில் எனப்படும் கத்திரி வெயில் வரும் 4 ஆம் தேதி முதல்தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.


தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 107° F வெயில் பதிவாகியுள்ளது. ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி, நாமக்கல், தருமபுரி, திருப்பத்தூர், திருத்தணி, கோவை, சேலம், பாளையங்கோட்டை, மீனம்பாக்கம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 100° ஃபாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.


தமிழ்நாட்டில் 29 ஆம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel