சுதந்திர போராட்ட வீரர்களுக்கு கவுரவம்..!- ஓய்வூதியம் ரூ.25,000-ஆக உயர்த்தி அறிவித்த முதலமைச்சர் விஜய்
80-வது சுதந்திர தின விழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிவைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், சுதந்திர தின விழா உரையாற்றினார்.
அப்போது முதலமைச்சர் விஜய் கூறியதாவது:-
கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் பிரபலமானவர்கள் உள்பட பெயர் தெரியாத ஒவ்வொரு சுதந்திர வீரர்களுக்கும் எனது வீர வணக்கங்கள்.
அனைவரும் ஒன்று சேரும்போதுதான் சாதி, மதம், மொழி, இனம் என அனைத்தும் உடைந்து நொறுங்கும். ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கு நன்றி
வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகத்தை நோக்கமாக கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம். தமிழக நலனுக்கு எதிராக மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும்.
முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000 இருந்து ரூ.50,000- ஆக உயர்வு.
விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாநில அரசின் ஓய்வூதியம் ரூ.25,000-ஆக உயர்த்தப்படுகிறது.
மாற்றுத்திறன் கொண்ட முநன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000-ஆக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.