பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளிட்ட தமிழக அரசு
பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலை, தமிழக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில், பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, 2025 மே முதல், இந்த ஆண்டு பிப்ரவரி வரை, கூட்டுறவு நிறுவனங்களில், பயிர்க்கடன் பெற்ற, 14.43 லட்சம் விவசாயிகளின், 5,932 கோடி ரூபாய் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்தது.
மாவட்ட வாரியாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகள், அவர்களின் தள்ளுபடி தொகை விபரம் ஆகியவை, இணையதளத்தில் 'www.kooturavu.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் உள்ள வி.ஏ.ஓ., அலுவல கங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில், பயிர்க் கடன்தள் தள்ளுபடி திட்ட பயனாளிகள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
Tags / குறிச்சொற்கள்:
விவசாய பயிர்கடன் தள்ளுபடி
தமிழக அரசு
பயிர்க்கடன்
FARM LOAN
FARM LOAN WAIVER
CROP