தவெகவுக்கு 60 சீட் – ரூ.1000 கோடி! விஜய் – இபிஎஸ் மறைமுக டீல்!

By Admin | Published in செய்திகள் at பிப்ரவரி 10, 2025 திங்கள் || views : 1110

தவெகவுக்கு 60 சீட் – ரூ.1000 கோடி! விஜய் – இபிஎஸ் மறைமுக  டீல்!

தவெகவுக்கு 60 சீட் – ரூ.1000 கோடி! விஜய் – இபிஎஸ் மறைமுக டீல்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் தவெக தலைவர் விஜய்யை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் 90 சதவிகிதம் டீல் ஓகே ஆகி இருக்கிறது. அதனால்தான் அதிமுக – தவெக கூட்டணி என்பது 90 சதவிகிதம் உறுதியாகிவிட்டது என்று தகவல் பரவியது. ஆனாலும் கூட்டணி ஒப்பந்தம் இன்னமும் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு காரணம் அந்த முட்டுக்கட்டைதான்.

அது எந்த முட்டுக்கட்டை? அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதுதான் சாதகமானது என்று ஆரம்பத்திலேயே முடிவெடுத்துதான் மாநாட்டில் அதிமுகவை விமர்சிக்கவில்லை விஜய். மாநாட்டிற்கு பிறகும் அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும், இபிஎஸ் மகன் மிதுன் தவெகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று தகவல் கசிந்தது.

அதற்கேற்றார் போல் தவெக மாநாட்டினை வரவேற்று பேசி வந்தனர் அதிமுக சீனியர்கள். ஆனால், தவெக சார்பில் ஊடகங்களில் பேசி வந்த அய்யநாதனுக்கு இது தெரியாததால், அவர் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காகவா விஜய் கட்சி தொடங்கினார். தவெக ஒருபோதும் அதிமுகவுடன் கூட்டணி வைக்காது என்று சொன்னார்.


ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையில் இருப்பதால், அதிகாரப்பகிர்வை விரும்பி தவெகவை தலைமையாகக் கொண்டு தேர்தலை சந்திக்க நினைக்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. இல்லையேல் தவெக தனித்து போட்டியிடும் என்று சொன்னார்.

அய்யநாதன் சொன்னதை தவெக ரசிக்கவில்லை. தவெக தேர்தல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமி, அய்யநாதனை அழைத்து கண்டித்ததாக அய்யநாதனே இப்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜான் ஆரோக்கியசாமி கண்டித்ததால் விஜய்யை நேரில் சந்தித்து, ‘அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காதுதானே? ’என்று கேட்டிருக்கிறார் அய்யநாதன். அதற்கு விஜய், ஆமாம் என்று சொல்லாமல், ‘அப்படி ஒரு முயற்சி போய்க்கொண்டிருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார்.

விஜய் இப்படி வெளிப்படையாகச் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த அய்யநாதன், ‘’தவெகவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அது தேவையில்லை ’’என்று சொன்னதை விஜய் ரசிக்கவில்லையாம். அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் விஜய் இருப்பது புரிந்ததும் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார் அய்யநாதன்.


தற்போதும் அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறார் அய்யநாதன். தவெகவில் அய்யநாதன் இருக்கும் வரை கூட்டணி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை போட்டுவிடுவார் என்று நினைத்து அவராகவே வெளியேறும்படி அவருக்கான முக்கியத்துவத்தை குறைத்து வந்திருக்கிறது தவெக. அதன்படியே அய்யநாதன், ‘இனி தவெகவை ஆதரவித்து பேசமாட்டேன்’ என்று அறிவித்து வெளியேறிவிட்டார்.

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறிக்குப் காரணம் அதிகாரப்பகிர்வுதான் என்கிறார் அய்யநாதன். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் முதல்வர் வேட்பாளர் விஜய்தான் என்று சொல்கிறதாம் தவெக தரப்பு. இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததாம். விஜய்யை முதல்வர் ஆக்குவதற்காகவா 53 வருடங்களாக அதிமுக இயங்கிக்கொண்டிருக்கிறது என்று கேட்டிருக்கிறது அதிமுக தரப்பு.


உடனே, இபிஎஸ்சை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார் என்று கேட்டிருக்கிறது தவெக தரப்பு. இந்த அதிகாரப்பகிர்வு போட்டியால்தான் அதிமுக – தவெக கூட்டணி ஒப்பந்தம் இன்னமும் இறுதி செய்யப்படாமல் உள்ளதாம்.

விஜய்க்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுக்கலாம் என்று இருதரப்புக்கும் இடையில் சிலர் பேசி கூட்டணியை முடித்து வைக்க முயற்சித்து வருகிறார்களாம்.

அதிமுகவும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறது. நாமக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்ற கூட்டத்தில் திடீரென்று மேடையேறிய போதை நபர், ‘’விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தே ஆகணும்’’ என்று முழக்கம் எழுப்பினார். இது திட்டமிட்ட நாடகம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் தவெகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லவே இல்லை. 2026இல் வலுவான கூட்டணி அமையும் என்றே சொல்லி வருகின்றனர். விஜய்யுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, ‘’தேர்தல் அறிவுப்புக்கு இன்னும் 13 மாத காலங்கள் உள்ளன. தேர்தல் நேரத்தில் அதிமுக வலுவான கூட்டணியை அமைக்கும்’’ என்கிறார் எடப்பாடி பழனிசாமி. தவெகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று அதிமுக மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. அவர், ‘’அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இரண்டு பேர் விஜய்யை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அந்த சந்திப்பில் நடந்தது என்ன? என்பது குறித்து சொல்ல விரும்பவில்லை’’ என்கிறார்.

அவர் மேலும், ‘’தனித்து களம் காண முடியாது என்கிற நிலையில் இருக்கிறது இபிஎஸ் தலைமையிலான அதிமுக. அதே நேரம், அதிமுகவுக்கு இருக்கும் வாக்கு சதவிகிதத்தில் 10 சதவிகிதம்தான் தவெகவுக்கு உள்ளது. தவெகவுக்கு இருக்கும் வாக்கு சதவிகிதம் என்பது 4 சதவிகிதம்தான். ஆனால், கூட்டம் சேர்க்கும் ஆளுமை விஜய்யிடம் உள்ளது. அதற்காகத்தான், ‘’விஜய்க்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாமா? இல்லை, 1000 கோடி ரூபாய் கொடுக்கலாமா? இல்லை, 60 சீட் கொடுக்கலாமா? என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார் பழனிசாமி’’ என்கிறார்.


அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வரும் நிலையில் இந்த கூட்டணி இணையக்கூடாது என்று அய்யநாதன் வெளிப்படையாகப் பேசி வரும் நிலையில், அதை வைத்து, முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக விஜய்யை ஏற்காது, ஏற்கக்கூடாது என்று பலரும் சொல்லி வரும் நிலையில், தற்போது இதை திசைதிருப்பும் விதமாக 2026இல் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று தவெக தரப்பில் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிமுக விஜய் தவெக இபிஎஸ் தங்கமணி எடப்பாடி பழனிசாமி VIJAY TVK ADMK
Whatsaap Channel
விடுகதை :

அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?


விடுகதை :

தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?


விடுகதை :

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி தரவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார். இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு

செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !

செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில் அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது..தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை அறிக்கையும் மார்ச் 15 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்

செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்

சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த மாதம் கோவையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் புறக்கணித்தார். அன்று முதல் செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும்

மனித நேயம், சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு

மனித நேயம், சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு

சென்னை: ரமலான் மாதத்தையொட்டி, தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு தவெக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் மாலை 5 மணியளவில் வருகை தந்தார். விஜய்யை காண அதிக அளவில் பொதுமக்கள்

அ.தி.மு.க.வில் நான் ஒரு குறுநில மன்னர்தான்: மாபா. பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி மிரட்டல்

அ.தி.மு.க.வில் நான் ஒரு குறுநில மன்னர்தான்: மாபா. பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி மிரட்டல்

சிவகாசி : விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர்போல் செயல்படுவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் பேசினார். இந்த நிலையில் இதற்கு சிவகாசியில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும்போது கூறியதாவது:- மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாபா.

த.வெ.க-வின் ரமலான் நோன்பு : நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் ஆதவ் அர்ஜூனா நேரில் ஆய்வு

த.வெ.க-வின் ரமலான் நோன்பு : நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் ஆதவ் அர்ஜூனா நேரில் ஆய்வு

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று நோன்பு திறந்து வைக்கிறார். மேலும், நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கும் அவர் விருந்தளிக்க உள்ளார். இந்நிலையில், நளை நடைபெறவுள்ள நோன்பு நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை

சீமானுக்கு எதிரான நடிகையின் பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

சீமானுக்கு எதிரான நடிகையின் பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

விஜயலட்சுமி விவகாரம் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், சீமானுக்கு எதிரான வழக்கை புலன் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் போலீ​ஸார் பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​தனர். இதை ரத்து

தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் உள்ளார்.. - பிரஷாந்த் கிஷோர்

தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் உள்ளார்.. - பிரஷாந்த் கிஷோர்

மாமல்லபுரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் கிஷோர், "தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பிரசாந்த்

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!


செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !

செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !


சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்


செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்

செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்


தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next