Tamil News & polling
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
டிச.24-ந்தேதி குற்றம் செய்தபிறகு அடுத்த நாள் ஞானசேகரன் என்ன செய்கிறான்? CDR-ஐ பொறுத்தவரைக்கும் பழக்க வழக்கம் எப்படி இருக்கு?
அந்த பகுதி 170-வது வட்ட செயலாளர் ஒரு முக்கியமான தி.மு.க.-வின் மூத்த தலைவர் கோட்டூர் சண்முகம். இவரும் ஞானசேகரனும் டிச.24-ந்தேதி காலையில் இருந்து மாலை வரை 6 முறை பேசுகிறார்கள். அன்று காலை 7.27-க்கு முதல் போன்கால் தொடங்குது. மாலை 4.01 -வரை 5 முறை பேசுகிறார்கள். அதன்பிறகு தான் 4-5 மணிநேரம் பேசலை. அந்த நேரத்தில் ஞானசேகரனை காவல்நிலையத்தில் வைத்திருக்கணும். வெளியே வந்த பிறகு ஞானசேகரனும் கோட்டூர் சண்முகமும் மறுபடியும் பேசுகிறார்கள். எதுக்கு கோட்டூர்புரம் போலீசார் 24-ந்தேதி ஞானசேகரன் காவல்நிலையத்தில் இருந்து வெளியே விட்டீர்கள்? ஆதாரங்களை அழிக்கவா? செல்போன் பதிவு மற்றும் வீடியோக்களை அழிக்கவா? இல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் உபயோகத்தில் இருந்த கேமராக்களை கழட்டி வீசவா? எதற்காக 24-ந்தேதி கைது செய்யப்பட்ட ஞானசேகரனை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து வெளியே விடப்பட்டார்?
இந்த நேரத்தில் முக்கியமான விஷயம், ஞானசேகரன் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தபிறகு இரவு 8.30 மணிக்கு மேல அமைச்சர் மா.சுப்பிரமணியனும், கோட்டூர் சண்முகமும் பேசுகிறார்கள். மறுபடியும் 8.32 மணிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியனும், கோட்டூர் சண்முகமும் பேசுகிறார்கள். இதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எதற்காக? யாரை காப்பாற்றுவதற்காக இவ்வளவு பதட்டம்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியக்கூடிய நடராஜன் என்ற முக்கியமான அதிகாரி. அவரிடம் கேட் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை எல்லாம் காவல்துறை தான் சொல்லணும். இது என்னுடைய வேலை கிடையாது. 48 மணிநேரம் கழித்து அந்த நடராஜன் யார் என்பது குறித்து பேசுவோம். அவர் PRO- வா? கேட் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? என்று.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடிய நடராஜனும், கோட்டூர் சண்முகமும் டிச-23-ந்தேதி முதல் டிச.26-ந்தேதி வரை 13 முறை போனில் பேசுகிறார்கள். இதையடுத்து கோட்டூர் சண்முகம் ஒரு காவல்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு பேசுகிறார். இதற்கு காரணம் ஆதாரம் அழிக்கப்படுகிறது. உள்ளே போயிட்டு வெளியே வந்த ஞானசேகரன் ஆதாரத்தை அழிக்கிறான். இதை நான் சும்மா சொல்லவில்லை. எஸ்ஐடி பதிவு பண்ண 11 பிரிவுகளில் ஒரு பிரிவு ஆதாரத்தை அழித்ததற்காக போட்டு இருக்காங்க. அப்படி என்ன ஆதாரத்தை அழித்தான்.
அதன்பிறகு 25-ந்தேதி ஞானசேகரனை கைது செய்த பிறகு காவல்துறை சொல்கிறது... அண்ணா பல்கலைக்கழக கேமராக்கள் வேலைசெய்யவில்லை. செல்போன் தெரியலை. மே 14-ந்தேதி தான் சொல்றாங்க ஞானசேகரன் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கு. அது எந்த நிலைமையில் இருக்குன்னு கூட தெரியலை. 25-ந்தேதி காவல்துறையை பொறுத்தவரை Blank. ஆகவே கோட்டூர் சண்முகத்துக்கு எதற்காக இவ்வளவு பதட்டம்? காவல்துறை கோட்டூர் சண்முகத்தை அழைத்து விசாரித்தீர்களா? கோட்டூர் சண்முகம் எந்த காவல்துறை அதிகாரிகிட்ட பேசுனாங்க அவங்களை அழைத்து பேசுனீங்களா? அமைச்சர் மா. சுப்பிரமணியனை காவல்நிலையத்திற்கு அழைத்தீர்களா எஸ்ஐடி? அவர்கிட்ட கேட்டீங்களா எதற்காக போன் வந்தது? எதற்காக நீங்க பேசுனீங்க? இதில் உங்களுக்கு என்ன தொடர்பு? இந்த கேள்விகளை நம்முடைய எஸ்ஐடி அதிகாரிகள் கேட்டீர்களா?
இந்த நேரத்தில் 2 விஷயங்களை கவனிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் வழக்கறிஞர் சொல்கிறார், பாதிக்கப்பட்ட மாணவியிடம் 2 காவல்துறை அதிகாரிகள் FIR கொடுக்க வேண்டாம். FIR கொடுத்தால் வாழ்க்கை கெட்டு போகும் என்று சொல்கிறார்கள். ஒருத்தங்க மஃப்டியில் வராங்க, இன்னொருத்தங்க சீருடையில் வராங்க. இந்த இரண்டு அதிகாரிகளும் மாணவியிடம் FIR வாங்க ஒருநாள் முழுவதும் தாமதம் பண்றாங்க.
இன்றைக்கு நாம் கேட்கக்கூடிய முக்கியமான கேள்விகள்... யார் அந்த சார்? அதே கேள்வியே கேட்கிறோம். முதலில் இருந்து கேட்கிறோம். கோட்டூர் சண்முகம் விசாரிக்கப்பட வேண்டிய நபர். அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர். அந்த தெளிவை முதலமைச்சர் சொல்லாமல் எதற்காக நாடகம் போடுகிறார். முதலமைச்சருக்கு 2 பொறுப்புகள், 2 பதவிகள் இருக்கு. கட்சியின் தலையீடு ஆரம்பத்தில் இருந்து இருக்கு. காவல்துறை தலையீடு இருக்கு. இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கு... 24-ந்தேதி பல விஷயங்கள் நடந்திருக்கு. அங்கு தான் யார் அந்த சார்? ஒளிந்திருக்கிறார். தொடர்ந்து கேள்விகள் கேட்போம். இதைவிட போறதில்லை என்றார்.

விஜய் Vijay DMK Chennai சென்னை திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP எடப்பாடி பழனிசாமி Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran திருமாவளவன் ADMK AIADMK டிடிவி தினகரன் AMMK Thirumavalavan MK Stalin மு.க.ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss PMK சீமான் செங்கோட்டையன் தமிழ்நாடு Edappadi Palaniswami Sengottaiyan Seeman Congress சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை பாமக முக ஸ்டாலின் Nellai Tamilaga Vettri Kazhagam உதயநிதி ஸ்டாலின் நெல்லை தமிழகம் Thoothukudi காங்கிரஸ்