INDIAN 7

Tamil News & polling

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கான தேதி அடுத்த வாரம் அறிவிப்பு

By E7 Tamil 24 அக்டோபர் 2025 05:10 AM
Nature

சென்னை,

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும். முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதில் உள்ள பெயர் விவரங்களை சரிபார்த்து திருத்திக் கொள்ளவும், பெயர் நீக்கப்பட்டவர்கள் பெயரை சேர்க்கவும், புதிதாக சேருபவர்களும் விண்ணப்பிக்கவும் இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்காக சிறப்பு முகாம்களையும் இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும்.

இந்த நாட்களில் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை டிசம்பர் மாதத்தில் சரிபார்த்து, அவற்றை இறுதி செய்து ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆனால் கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் இந்த ஆண்டு தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியாக (எஸ்.ஐ.ஆர்.) அதை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொள்ள உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் எஸ்.ஐ.ஆர். பணி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்று கேட்டபோது தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமே எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கும் தேதி அடுத்தவாரம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இந்தப் பணியின்போது வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக வந்து விண்ணப்பப்படிவங்களை வழங்குவார்கள்.

முன்னதாக வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்து விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். பெயர் இடம்பெறாமல் இருந்தால், இந்திய தேர்தல் கமிஷன் குறிப்பிடும் 11 ஆவணங்களை விண்ணப்பத்துடன் சேர்த்து கொடுக்க வேண்டும். இந்த கால அவகாசத்தை பயன்படுத்தாவிட்டால் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க முடியாமல் போய்விடும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கான தேதி அடுத்த வாரம் அறிவிப்பு1



Whatsaap Channel


Image சென்னை, வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில் மனு

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில்


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு


குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று


திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த



Tags

விஜய் DMK Vijay அதிமுக TVK திமுக ADMK சென்னை கனமழை திருமாவளவன் தவெக பாஜக வடகிழக்கு பருவமழை அண்ணாமலை Chennai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon Annamalai தமிழக வெற்றிக் கழகம் BJP Thirumavalavan தவெக மாநாடு MK Stalin சீமான் தீபாவளி வானிலை ஆய்வு மையம் AIADMK தமிழக வெற்றிக்கழகம் PMK Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran இந்திய அணி தமிழக அரசு மு.க.ஸ்டாலின் Edappadi Palaniswami indian cricket team Tamil Nadu AMMK மழை விசிக பிரதமர் மோடி Tamilaga Vettri Kazhagam Anbumani Ramadoss Rain பாமக PM Modi அன்புமணி ராமதாஸ் தவெக விஜய் செங்கோட்டையன் Udhayanidhi Stalin தமிழ்நாடு Ajith வேட்டையன் VCK Rajinikanth IMD காங்கிரஸ் இந்தியா ராமதாஸ் Ind vs Nz நடிகை கஸ்தூரி அமரன் TVK Vijay GetOut Stalin rain Ramadoss Tirunelveli திமுக அரசு GetOut Modi ரஜினிகாந்த் தனுஷ் Sengottaiyan திருநெல்வேலி M.K. Stalin Heavy Rain Vettaiyan விடுமுறை மதுரை கோலிவுட் வானிலை திருச்செந்தூர் கைது நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரன்