INDIAN 7

Tamil News & polling

பீகாரில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

By E7 Tamil 14 நவம்பர் 2025 01:00 AM
Nature

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ‘விவிபாட்’ எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அறைகளின் வளாகங்களில் தலா ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட உயர் அதிகாரிகள் பணியில் உள்ளனர். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், சட்டசபை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் பாதுகாப்பு அறைகளுக்கு அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

38 மாவட்டங்களில் மொத்தம் 46 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஈரடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்அடுக்கில், ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படையினரும், வெளிஅடுக்கில் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 9 மணியில் இருந்து முன்னிலை நிலவரம் தெரிய வரும். மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எல்லாம் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். எனவே, பீகாரில், தொடர்ந்து 5-வது தடவையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.

பீகாரில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை1



Whatsaap Channel


Image பாட்னா, பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6-ந் தேதி மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்டமாக

Image சென்னை, 2026 தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில்

விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா..? தொண்டர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா..? தொண்டர்களிடையே அதிகரிக்கும்


ரஜினி - கமல் இணையும் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி

ரஜினி - கமல் இணையும் படத்திலிருந்து விலகிய


உத்தர பிரதேசம்: வந்தே மாதரம் பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

உத்தர பிரதேசம்: வந்தே மாதரம் பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்


ஆட்சியை பிடிப்பது யார்..? - பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை

ஆட்சியை பிடிப்பது யார்..? - பீகாரில் நாளை வாக்கு


தங்க காசு தருவதாக கூறி சீட்டு பணம் வசூலித்து ரூ.8 கோடி மோசடி - தம்பதி கைது

தங்க காசு தருவதாக கூறி சீட்டு பணம் வசூலித்து ரூ.8 கோடி மோசடி



Tags

விஜய் DMK Vijay TVK அதிமுக திமுக சென்னை தவெக கனமழை ADMK Chennai பாஜக வடகிழக்கு பருவமழை அண்ணாமலை திருமாவளவன் Northeast Monsoon Annamalai BJP எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகம் தீபாவளி தவெக மாநாடு MK Stalin சீமான் Thirumavalavan வானிலை ஆய்வு மையம் AIADMK தமிழக வெற்றிக்கழகம் PMK TVK Conference Tamil Nadu Seeman TTV Dhinakaran மழை முக ஸ்டாலின் இந்திய அணி உதயநிதி ஸ்டாலின் indian cricket team Edappadi Palaniswami தமிழக அரசு மு.க.ஸ்டாலின் AMMK பாமக Rain Tamilaga Vettri Kazhagam செங்கோட்டையன் Udhayanidhi Stalin பிரதமர் மோடி தவெக விஜய் PM Modi அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு IMD VCK rain காங்கிரஸ் GetOut Stalin Tirunelveli TVK Vijay Sengottaiyan வானிலை இந்தியா விசிக அமரன் ராமதாஸ் Ajith Rajinikanth கைது நடிகை கஸ்தூரி Ind vs Nz திருச்செந்தூர் டிடிவி தினகரன் நயினார் நாகேந்திரன் விடுமுறை Heavy Rain திருநெல்வேலி வேட்டையன் GetOut Modi தென்காசி தமிழகம் கோலிவுட் தனுஷ் மதுரை Ramadoss Diwali M.K. Stalin