நெல்லையில் பலூன்கள் பறக்கவிட்டு காதலர் தினம் கொண்டாட்டம்
1 month ago
14 பிப்ரவரி 2026 07:52 AM | views : 217
காதலர் தினத்தை முன்னிட்டு புரட்சிகர இளைஞர் கழகம் சார்பாக நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவப்பு நிற பலூன்கள் பறக்க விடப்பட்டு, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி காதலர் தினம் கொண்டாடப்பட்டது.
காதலர் தின நிகழ்ச்சிக்கு புரட்சிகர இளைஞர் கழக மாநில தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் பொன்இசக்கி முருகன், தனுஷ்கோடி, பேச்சிராஜா, மாரிமுத்து, பேச்சிமுத்து, ரஃபிக் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.