கொரோனா 3வது அலைக்கான விழிப்புணர்வுப் பதிவு!
ஜூலை 15, 2021 | 07:53 am | views : 1768
கொரோனா 3வது அலை, குழந்தைகளைப் பாதிக்கும் என்று சொல்கிறார்கள். தமிழ்நாடு அரசும் களத்தில் சித்தமருத்துவத்துடன் தயாராக இருப்பதாக முன்னறிவித்திருக்கிறது. சித்தமருத்துவத்தில் குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கையாகத் தரப்படுவது உரைமாத்திரை. ஒரு மாத வயது குழந்தையிலிருந்து மூன்று வயது வரையிலும் இந்த மருந்தினை எடுத்துக்கொள்வதால் சளி, காய்ச்சலிலிருந்து விடுதலைபெறலாம், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாகும். சுவாச உறுப்புகளின் பாதிப்புகள் குணமாகும், புதிய தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும்.
இது பற்றிய ஆய்வறிக்கைகள் எல்லாம் வேண்டும், இருந்தால் தான் ஏற்றுக்கொள்வேன் என்று சொல்பவர்களுக்கு உரைமாத்திரை பற்றிய ஆய்வறிக்கையும் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த உரைமாத்திரை, தமிழ்ப்பண்பாட்டுடன் பன்னெடுங்காலமாகப் பின்னிப் பிணைந்த ஒரு மருத்துவ அறிவு. இன்றும் கிராமங்களில் பிறந்த குழந்தைகளைப் பார்க்கப்போகும் தாய்மாமன் கொண்டு செல்லும் சீர்வரிசைகளில் இந்த உரைமாத்திரையும் அதில் சேரும் மருந்துப்பொருட்களும் அவசியம் இருக்கும். தமிழ்த்திணைச்சூழலில் வளரும் ஒவ்வொரு குழந்தைக்கும் இதுவே தாய்ப்பாலுக்கு அடுத்த முதன்மையான மருந்தாகிறது. ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகமும் இந்த உரைமருந்தையும் அதன் மருத்துவப்பொருட்களையும் கடந்து தான் வளர்ந்தெழுந்து நிற்கிறது என்று ஆணித்தரமாகச் சொல்லலாம்.
மானுடவியல் ஆய்வின் அடிப்படையிலும், நவீன மருத்துவ ஆய்வின் அடிப்படையிலும் இந்தத் தனித்துவமான மருந்தினைப் புரிந்துகொள்ளும் அவசியம் இன்று நம்மிடையே இருக்கிறது. இது மட்டுமன்றி, நவீனக்கொள்ளை நோயில் இம்மருந்தின் செயல்பாட்டினை நாம் உணர்ந்துகொள்ளவும் முக்கியமான தருணம், இது.
Also read... கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!
குழந்தைகளுக்குத் தேன் அல்லது பாலில் உரைத்துக் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்: மாந்தம், கணம், சளி, இருமல், நாட்பட்ட சளி, நாட்பட்ட இருமல், தொடர் சுரம் ஆகியவற்றின் போது உடல் வன்மையை அதிகரித்து தொற்றுநோயைத் தடுக்கும்.
கிடைக்கும் அளவு:
100 மி.கிராம் மாத்திரை - 5 X 20 Blister,100 மாத்திரைகள், 500 மாத்திரைகள்
500 மி.கிராம் மாத்திரை - 100 மாத்திரைகள், 500 மாத்திரைகள்
ஆதாரம்:
The Siddha formulary of India - பாகம் 1
சேரும் மருந்துப்பொருட்களும் அளவுகளும்
சுக்கு, அதிமதுரம், அக்ரகாரம், வசம்பு, சாதிக்காய், மாசிக்காய், கடுக்காய்த்தோல், பெருங்காயம், பூண்டு, திப்பிலி, வேலம்பிசின் - வகைக்கு 100 கிராம், துளசி கசாயம், வேப்பங்கொளுந்து கசாயம் வகைக்கு 1,200 லிட்டர்.
அளவும் துணைமருந்தும்
1 முதல் 2 மாத்திரை பால் அல்லது வெந்நீருடன் தினமும் இரண்டு வேளைகள் உணவிற்குப் பின் கொடுக்கவும் (அ) மருத்துவரின் அறிவுரைப்படி (பெரியவர் 500 மி.கி. அளவு மாத்திரை)
(சிறியவர் 100 மி.கி. அளவு மாத்திரை)
The Multi-faceted role of Urai Mathirai – The Immune pill of Siddha - This was published in the 'Asian Journal of Pharmaceutical and Clinical Research'.
https://www.researchgate.net/publication/314238918_The_Multi-faceted_role_of_Urai_Mathirai_-_The_Immune_pill_of_Siddha
நன்றி: சித்தமருத்துவர்களின் பேரமை
நன்றி S R Deva Raj இரா. மதிவாணன்
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.
கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை
வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து
நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்
அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!
அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,
நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!
நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய
கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!
கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,
குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்
பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..?
தமிழ் திரைத்துறையில் மெல்லிய குரல் கொண்ட பாடகிகளுக்கு மத்தியில் தனது தனித்துவமான குரலால் சிறந்த பின்னணி பாடகி ஆகும் முத்திரை பதித்தவர் பாடகி சுசித்ரா. 2002 க்கு பின் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்களை இழுத்த சுசித்ராவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன. மன்மதன், வல்லவன், போக்கிரி போன்ற படங்களில் அவர் பாடிய
கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று கங்கனா ரனாவத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் கங்கனா ரனாவத் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.