Tamil News & polling
கொரோனா 3வது அலை, குழந்தைகளைப் பாதிக்கும் என்று சொல்கிறார்கள். தமிழ்நாடு அரசும் களத்தில் சித்தமருத்துவத்துடன் தயாராக இருப்பதாக முன்னறிவித்திருக்கிறது. சித்தமருத்துவத்தில் குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கையாகத் தரப்படுவது உரைமாத்திரை. ஒரு மாத வயது குழந்தையிலிருந்து மூன்று வயது வரையிலும் இந்த மருந்தினை எடுத்துக்கொள்வதால் சளி, காய்ச்சலிலிருந்து விடுதலைபெறலாம், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாகும். சுவாச உறுப்புகளின் பாதிப்புகள் குணமாகும், புதிய தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும்.
இது பற்றிய ஆய்வறிக்கைகள் எல்லாம் வேண்டும், இருந்தால் தான் ஏற்றுக்கொள்வேன் என்று சொல்பவர்களுக்கு உரைமாத்திரை பற்றிய ஆய்வறிக்கையும் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த உரைமாத்திரை, தமிழ்ப்பண்பாட்டுடன் பன்னெடுங்காலமாகப் பின்னிப் பிணைந்த ஒரு மருத்துவ அறிவு. இன்றும் கிராமங்களில் பிறந்த குழந்தைகளைப் பார்க்கப்போகும் தாய்மாமன் கொண்டு செல்லும் சீர்வரிசைகளில் இந்த உரைமாத்திரையும் அதில் சேரும் மருந்துப்பொருட்களும் அவசியம் இருக்கும். தமிழ்த்திணைச்சூழலில் வளரும் ஒவ்வொரு குழந்தைக்கும் இதுவே தாய்ப்பாலுக்கு அடுத்த முதன்மையான மருந்தாகிறது. ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகமும் இந்த உரைமருந்தையும் அதன் மருத்துவப்பொருட்களையும் கடந்து தான் வளர்ந்தெழுந்து நிற்கிறது என்று ஆணித்தரமாகச் சொல்லலாம்.
மானுடவியல் ஆய்வின் அடிப்படையிலும், நவீன மருத்துவ ஆய்வின் அடிப்படையிலும் இந்தத் தனித்துவமான மருந்தினைப் புரிந்துகொள்ளும் அவசியம் இன்று நம்மிடையே இருக்கிறது. இது மட்டுமன்றி, நவீனக்கொள்ளை நோயில் இம்மருந்தின் செயல்பாட்டினை நாம் உணர்ந்துகொள்ளவும் முக்கியமான தருணம், இது.
குழந்தைகளுக்குத் தேன் அல்லது பாலில் உரைத்துக் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்: மாந்தம், கணம், சளி, இருமல், நாட்பட்ட சளி, நாட்பட்ட இருமல், தொடர் சுரம் ஆகியவற்றின் போது உடல் வன்மையை அதிகரித்து தொற்றுநோயைத் தடுக்கும்.
கிடைக்கும் அளவு:
100 மி.கிராம் மாத்திரை - 5 X 20 Blister,100 மாத்திரைகள், 500 மாத்திரைகள்
500 மி.கிராம் மாத்திரை - 100 மாத்திரைகள், 500 மாத்திரைகள்
ஆதாரம்:
The Siddha formulary of India - பாகம் 1
சேரும் மருந்துப்பொருட்களும் அளவுகளும்
சுக்கு, அதிமதுரம், அக்ரகாரம், வசம்பு, சாதிக்காய், மாசிக்காய், கடுக்காய்த்தோல், பெருங்காயம், பூண்டு, திப்பிலி, வேலம்பிசின் - வகைக்கு 100 கிராம், துளசி கசாயம், வேப்பங்கொளுந்து கசாயம் வகைக்கு 1,200 லிட்டர்.
அளவும் துணைமருந்தும்
1 முதல் 2 மாத்திரை பால் அல்லது வெந்நீருடன் தினமும் இரண்டு வேளைகள் உணவிற்குப் பின் கொடுக்கவும் (அ) மருத்துவரின் அறிவுரைப்படி (பெரியவர் 500 மி.கி. அளவு மாத்திரை)
(சிறியவர் 100 மி.கி. அளவு மாத்திரை)
The Multi-faceted role of Urai Mathirai – The Immune pill of Siddha - This was published in the 'Asian Journal of Pharmaceutical and Clinical Research'.
https://www.researchgate.net/publication/314238918_The_Multi-faceted_role_of_Urai_Mathirai_-_The_Immune_pill_of_Siddha
நன்றி: சித்தமருத்துவர்களின் பேரமை
நன்றி S R Deva Raj இரா. மதிவாணன்

விஜய் Vijay DMK Chennai சென்னை திமுக TVK அண்ணாமலை தவெக Annamalai அதிமுக பாஜக BJP Tamil Nadu கனமழை தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி பழனிசாமி TTV Dhinakaran MK Stalin திருமாவளவன் AIADMK ADMK சீமான் தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் AMMK டிடிவி தினகரன் செங்கோட்டையன் அன்புமணி ராமதாஸ் Thirumavalavan Anbumani Ramadoss Seeman முக ஸ்டாலின் Sengottaiyan PMK வடகிழக்கு பருவமழை Tamilaga Vettri Kazhagam வானிலை ஆய்வு மையம் Congress கைது பாமக Edappadi Palaniswami