INDIAN 7

Tamil News & polling

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

By E7 Tamil 03 டிசம்பர் 2025 04:48 AM
Nature

பெலகாவி,

கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) தாலுகா முர்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந்தேதி அந்த மாணவி, தனது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு அரைவை ஆலைக்கு மாவு அரைக்க சென்றாள். அப்போது அங்கு அதேப்பகுதியை சேர்ந்த மணிகண்டா தின்னிமணி, ஈரண்ணா ஆகியோர் வந்தனர். அவர்கள் சிறிது தூரம் சிறுமியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

பின்னர் சிறுமி கிராமத்தின் வெளிப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தின் அருகே சென்றபோது, பின்தொடர்ந்து வந்த 2 பேரும் திடீரென்று சிறுமியின் வாயை பொத்தி கரும்பு தோட்டத்துக்குள் தூக்கி சென்றனர். அங்கு வைத்து 2 பேரும் சிறுமியை மாறி, மாறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய சிறுமி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினாள்.

இதற்கிடையே சிறுமியின் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக சிலர் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன அவர்கள் உடனே இதுபற்றி புகார் எதுவும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர், கூட்டு பலாத்காரம் குறித்து முர்கோடு போலீசில் புகார் அளித்தனர். இதனை அறிந்த மணிகண்டா, ஈரண்ணா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து முர்கோடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு1



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜகோபால்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணா (வயது 51). தனியார் நிறுவன ஊழியரான இவர், மனைவியை பிரிந்து தனியாக வசித்து

Image பெங்களூரு, கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள கன்னி கிராமத்தை சேர்ந்தவர் பீரப்பா. இவரது மனைவி சாந்தாபாய். சாந்தபாய்க்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு

Image பெங்களூரு, கர்நாடக மாநிலம் கலபுரகி (மாவட்டம்) அருகே கல்லஹங்கரகா கிராமத்தை சேர்ந்தவர் குண்டேராவ் நீராலு (வயது 45), விவசாயி. இவரது மகள் மஞ்சுளா (17). இந்த சிறுமி கால் ஊனமுற்ற



Whatsaap Channel


நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த


கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை பலி.

கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை


ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


ஒரு ரூபாய் கேட்டு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம் மோசடி

ஒரு ரூபாய் கேட்டு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம்


தமிழகத்தில் இரவு நேரங்களில் குளிர் அதிகரிக்கும் - ஹேமச்சந்தர் தகவல்

தமிழகத்தில் இரவு நேரங்களில் குளிர் அதிகரிக்கும் - ஹேமச்சந்தர்



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக சென்னை அண்ணாமலை தமிழக வெற்றிக் கழகம் Chennai கனமழை Annamalai திருமாவளவன் MK Stalin பாஜக ADMK Tamil Nadu தவெக மாநாடு Thirumavalavan சீமான் AIADMK வடகிழக்கு பருவமழை BJP இந்திய அணி முக ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு தமிழக வெற்றிக்கழகம் வானிலை ஆய்வு மையம் தீபாவளி TVK Conference Tamilaga Vettri Kazhagam TTV Dhinakaran indian cricket team Seeman செங்கோட்டையன் AMMK Sengottaiyan PMK மு.க.ஸ்டாலின் Northeast Monsoon Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் மழை காங்கிரஸ் Rain பிரதமர் மோடி பாமக நயினார் நாகேந்திரன் தென்காசி VCK தவெக விஜய் நடிகை கஸ்தூரி TVK Vijay திருச்செந்தூர் விசிக Thoothukudi IMD பாலியல் தொல்லை GetOut Stalin விடுமுறை உதயநிதி ஸ்டாலின் Edappadi Palaniswami வானிலை மதுரை Tirunelveli அமரன் Congress தமிழகம் GetOut Modi திருநெல்வேலி Washington Sundar கோலிவுட் தூத்துக்குடி M.K. Stalin Heavy Rain Ind vs Nz திமுக அரசு தனுஷ் டிடிவி தினகரன் வாஷிங்டன் சுந்தர் சட்டசபை தேர்தல் Ajith இந்தியா Nainar Nagendran rain கைது