INDIAN 7

Tamil News & Polling

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அரசியல் கருத்து கணிப்பு விளையாட்டு சினிமா விடுகதைகள் நடிகைகள்

விவிபாட் சீட்டு விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவு

விவிபாட் சீட்டு விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவு
ஏப்ரல் 02, 2024 | 04:40 am | Views : 44

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வாக்குப்பதிவு எந்திரங்களுடன் விவிபாட் எந்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் தான் அளிக்கும் வாக்கு யாருக்கு செல்கிறது என்பதை சரிபார்க்க விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.வாக்காளர் வாக்கு எந்திரத்தில் வாக்களித்தப்பின் அதன் அருகே பொறுத்தப்பட்டுள்ள விவிபாட் எந்திரத்தில் வாக்காளர் யாருக்கு (வேட்பாளர் பெயர், சின்னம்) வாக்களித்தார் என்பதை உறுதிசெய்யும்வகையில் சீட்டு உருவாகும். அந்த சீட்டை வாக்காளர் பார்க்க முடியும். வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக எத்தனை வாக்குகள் அளித்துள்ளனர் என்ற விவரம் விவிபாடிலும் சீட்டுகளாக சேகரிக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது ஏதேனும் பிரச்சினை ஏற்படும்பட்சத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய விவிபாட்டுகளில் சேகரிக்கப்பட்டுள்ள சீட்டுகளும் எண்ணப்படுகின்றன.

இந்த நடைமுறை வாக்கு எண்ணிக்கையை மேலும் துள்ளியமாக்குகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது சந்தேகங்கள் ஏற்படுவதை தவிர்க்க விவிபாட் சீட்டு திட்டத்தை தேர்தல் ஆணையம் நடைமுறை படுத்தியுள்ளது. ஆனால், தேர்தலின்போது அனைத்து விவிபாட் சீட்டுகளும் எண்ணப்படுவதில்லை. மாறாக ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட சட்டமன்ற தொகுதியில் சராசரியாக 5 வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபாட் எந்திரங்களில் பதிவாகியுள்ள சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணுவதுபோல் விவிபாட் சீட்டுகளையும் முழுமையாக எண்ண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அருண் குமார் அகர்வால் என்ற சமூகநல ஆர்வலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின்போது ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட சட்டமன்ற தொகுதியில் சராசரியாக 5 வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபாட் எந்திரங்களின் சீட்டுகள் மட்டும் எண்ணப்படுகின்றன. மத்திய அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 24 லட்சம் விவிபாட் எந்திரங்கள் கொள்முதல் செய்துள்ளன. ஆனால், தேர்தலின்போது 20 ஆயிரம் விவிபாட் எந்திரங்களில் உள்ள சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. இதற்கு மாறாக வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்கு எண்ணுவதுபோல் அனைத்து விவிபாட் எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து விவிபாட் சீட்டுகளையும் முழுமையாக எண்ணுவது குறித்து பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது

Keywords: PARLIAMENT ELECTION ELECTION COMMISSION VVPAT SLIPS SUPREME COURT நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் ஆணையம் விவிபாட் சீட்டுகள் சுப்ரீம் கோர்ட்டு

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

விடுகதை :

சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?


விடுகதை :

பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


விடுகதை :

ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?


திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

2024-07-25 03:11:28 - 1 day ago

திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
கடந்த 2020-ம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் பேசியிருந்தார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் மீது


பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!

2024-07-22 03:40:09 - 4 days ago

பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!
பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய,


நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்

2024-07-22 01:51:11 - 5 days ago

நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்
கடலூர்,கடலூரில் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சினிமா படங்களில் 2-ம் பாகம் தோல்வியடைவது குறித்து கருத்து கேட்கிறீர்கள். மக்களின் ரசனைக்கு ஏற்றபடி படம் இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள். அந்த படங்கள் தான் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? 2 ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. கடந்த அரசும்,


அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு

2024-07-22 01:48:42 - 5 days ago

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2024-07-16 11:19:19 - 1 week ago

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் நெற்குணம் கிராமத்தில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது சிறுமிகளை கடந்த 2017


குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!

2024-07-16 09:44:26 - 1 week ago

குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!
குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். 1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த


நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

2024-07-16 08:52:54 - 1 week ago

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.


மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

2024-07-16 08:00:54 - 1 week ago

மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக,


Follow Me

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.