விவிபாட் சீட்டு விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவு

விவிபாட் சீட்டு விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவு

  ஏப்ரல் 02, 2024 | 04:40 am  |   views : 76


நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.



வாக்குப்பதிவு எந்திரங்களுடன் விவிபாட் எந்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் தான் அளிக்கும் வாக்கு யாருக்கு செல்கிறது என்பதை சரிபார்க்க விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.வாக்காளர் வாக்கு எந்திரத்தில் வாக்களித்தப்பின் அதன் அருகே பொறுத்தப்பட்டுள்ள விவிபாட் எந்திரத்தில் வாக்காளர் யாருக்கு (வேட்பாளர் பெயர், சின்னம்) வாக்களித்தார் என்பதை உறுதிசெய்யும்வகையில் சீட்டு உருவாகும். அந்த சீட்டை வாக்காளர் பார்க்க முடியும். வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக எத்தனை வாக்குகள் அளித்துள்ளனர் என்ற விவரம் விவிபாடிலும் சீட்டுகளாக சேகரிக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது ஏதேனும் பிரச்சினை ஏற்படும்பட்சத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய விவிபாட்டுகளில் சேகரிக்கப்பட்டுள்ள சீட்டுகளும் எண்ணப்படுகின்றன.



இந்த நடைமுறை வாக்கு எண்ணிக்கையை மேலும் துள்ளியமாக்குகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது சந்தேகங்கள் ஏற்படுவதை தவிர்க்க விவிபாட் சீட்டு திட்டத்தை தேர்தல் ஆணையம் நடைமுறை படுத்தியுள்ளது. ஆனால், தேர்தலின்போது அனைத்து விவிபாட் சீட்டுகளும் எண்ணப்படுவதில்லை. மாறாக ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட சட்டமன்ற தொகுதியில் சராசரியாக 5 வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபாட் எந்திரங்களில் பதிவாகியுள்ள சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணுவதுபோல் விவிபாட் சீட்டுகளையும் முழுமையாக எண்ண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அருண் குமார் அகர்வால் என்ற சமூகநல ஆர்வலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.



அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின்போது ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட சட்டமன்ற தொகுதியில் சராசரியாக 5 வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபாட் எந்திரங்களின் சீட்டுகள் மட்டும் எண்ணப்படுகின்றன. மத்திய அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 24 லட்சம் விவிபாட் எந்திரங்கள் கொள்முதல் செய்துள்ளன. ஆனால், தேர்தலின்போது 20 ஆயிரம் விவிபாட் எந்திரங்களில் உள்ள சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. இதற்கு மாறாக வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்கு எண்ணுவதுபோல் அனைத்து விவிபாட் எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



Also read...  குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை


இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து விவிபாட் சீட்டுகளையும் முழுமையாக எண்ணுவது குறித்து பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 19 hours ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 1 day ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 1 day ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 1 day ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 1 day ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 1 day ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்


பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..?

2024-05-14 17:02:39 - 2 days ago

பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..? தமிழ் திரைத்துறையில் மெல்லிய குரல் கொண்ட பாடகிகளுக்கு மத்தியில் தனது தனித்துவமான குரலால் சிறந்த பின்னணி பாடகி ஆகும் முத்திரை பதித்தவர் பாடகி சுசித்ரா. 2002 க்கு பின் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்களை இழுத்த சுசித்ராவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன. மன்மதன், வல்லவன், போக்கிரி போன்ற படங்களில் அவர் பாடிய


கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

2024-05-14 15:19:11 - 2 days ago

கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று கங்கனா ரனாவத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் கங்கனா ரனாவத் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.