கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக வருகிற 26-ந்தேதி மற்றும் மே 7-ந் தேதி நடைபெற உள்ளது. முதல்கட்டமாக பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்தி, பெங்களூரு புறநகர், கோலாா், சிக்பள்ளாப்பூர், துமகூரு, சித்ரதுர்கா, உடுப்பி-சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, மைசூரு, ஹாசன், மண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்த முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலை பா.ஜனதாவும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இது மட்டுமின்றி பகுஜன் சமாஜ் உள்ளிட்ட சிறு கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து தலைவர்கள், வேட்பாளர்கள் தேர்தல் பிரசார களத்தில் குதித்துள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகா மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியில் ராஜினாமா செய்துள்ளார்.இது குறித்து எஸ்.டி.குமார் ஓசூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொண்டேன். யாரை ஆதரித்து பிரசாரம் செய்வதென்று தெரியாமல் கர்நாடகா அ.தி.மு.க.வினர் குழப்பத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கர்நாடகா அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிற மாநிலங்களில் ஏன் அ.தி.மு.க.வை வளர்க்க வேண்டும் என மேலிடம் நினைப்பதாகவும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கர்நாடகாவில் இருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை எனவும் நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- "பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்று அனைவரின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டால் நம்மை வெல்ல யாராலும் முடியாது என்ற சூழல் உருவாகி
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!