INDIAN 7

Tamil News & Polling

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அரசியல் கருத்து கணிப்பு விளையாட்டு சினிமா விடுகதைகள் நடிகைகள்

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்
ஏப்ரல் 14, 2024 | 04:58 am | Views : 55

தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தேனி மக்களவைத் தேர்தல் களம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் யார்? - தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் ஜெயபால் ஆகியோர் களத்தில் நிற்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக வென்ற ஒரு தொகுதி தேனிதான். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் களம் கண்டு வெற்றியைப் பதிவு செய்தார்.


திமுக சார்பாக தேனியில் களம் காணும் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கெனவே தேனி மக்களவையில் களம் கண்டவர்தான். 2019-ம் ஆண்டு அமமுக சார்பாகப் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம்பிடித்தார். இந்தநிலையில், திமுகவில் இணைந்த அவருக்கு தேனியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரை எதிர்த்து அமமுக சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எதிர்த்துப் போட்டியிடுகிறார். அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். ஆகவே, டிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் போட்டி என்பது ’குரு - சிஷ்யன்’ மோதலாகியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.



அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 40 ஆண்டுகளாக அதிமுக கட்சியில் இருக்கிறார். ஒன்றிய செயலாளராக இருந்தவருக்கு எம்பி சீட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தங்க தமிழ்ச்செல்வன் போல் தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர் இல்லை. இப்போதுதான் தேனி மக்கள் இவரை அறிய தொடங்குகின்றனர். திமுக மீதான அதிருப்தி மற்றும் அதிமுக வாக்கு வாங்கியை அடிப்படையாகக் கொண்டு களமாடி வருகிறார். மேலும், புதிதாகப் போட்டியிடுவதால் தனக்கு எம்பியாகும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையும் முன்வைத்து மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

1999-ம் ஆண்டு தேனியில் நடந்த மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரன் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார். எனவே, அப்போது தொடங்கி தொகுதி மக்களுக்கு நன்றாக அறிமுகமானவராகத் தான் டிடிவி.தினகரன் இருக்கிறார். குறிப்பாக, இந்தத் தேர்தலில் வார்டு வார்டாக சென்று களப்பணி செய்து வருகிறார். இவருக்கு தேனி களம் பாசிட்டிவ்வாகத்தான் உள்ளது.

மாற்று கட்சியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு என்பதால் திமுக உட்கட்சி அளவில் சிறு மோதல் இருக்கிறது என்னும் கருத்து சொல்லப்படுகிறது. இதனால், தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். எனினும், திமுக சார்பாகக் களம் காணும் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கெனவே இந்தத் தொகுதியில் போட்டியிட்டவர்தான். எனவே, மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் மற்றும் ஆளும் திமுகவின் சப்போர்ட் எனக் களம் இவருக்கு அணுக எளிமையாகவுள்ளது. குறிப்பாக, மாநில அரசின் திட்டங்களான உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் ஆகியவற்றைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.


தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் மாம்பழ சாறு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துதல், வைகை அணையைத் தூர்வாருதல், கண்ணகி கோயில் செல்வதற்கான பாதையை அமைத்தல், ’திண்டுக்கல் - சபரிமலை’ ரயில்பாதைத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொகுதியில் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் இதனைக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். இருப்பினும் இக்கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளன. ஆகவே, அனைத்துக் கட்சிகளும் இதனை வாக்குறுதியாக அளித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேனி களத்தைப் பொறுத்தவரையிலும், ’திமுக, அதிமுக, அமமுக’ என மூன்று கட்சி வேட்பாளர்களுக்கும் தொகுதியில் நல்ல செல்வாக்கு இருப்பதால், களத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. எனினும், ’தங்க தமிழ்ச்செல்வன் - டிடிவி தினகரன்’ இடையே கடுமையான போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.


ஆண்டிபட்டி, தேனி, உசிலம்பட்டி, சேடபட்டி போன்ற பகுதிகளில் முக்குலத்தோர் ஓட்டுகள் அதிகம் உள்ளன.அதனால், அதே சமூகத்தைச் சேர்ந்த இந்த இருவர் மத்தியில் ’டஃப் ஃபைட்’ இருக்கும். இந்தக் கடுமையான போட்டியில் மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Keywords: டிடிவி தினகரன் தங்க தமிழ்ச்செல்வன் தேனி TTV DHINAKARAN THENI AMMK DMK

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

விடுகதை :

கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?


விடுகதை :

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


விடுகதை :

வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

2024-07-25 03:11:28 - 2 days ago

திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
கடந்த 2020-ம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் பேசியிருந்தார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் மீது


பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!

2024-07-22 03:40:09 - 5 days ago

பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!
பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய,


நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்

2024-07-22 01:51:11 - 5 days ago

நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்
கடலூர்,கடலூரில் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சினிமா படங்களில் 2-ம் பாகம் தோல்வியடைவது குறித்து கருத்து கேட்கிறீர்கள். மக்களின் ரசனைக்கு ஏற்றபடி படம் இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள். அந்த படங்கள் தான் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? 2 ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. கடந்த அரசும்,


அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு

2024-07-22 01:48:42 - 5 days ago

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2024-07-16 11:19:19 - 1 week ago

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் நெற்குணம் கிராமத்தில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது சிறுமிகளை கடந்த 2017


குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!

2024-07-16 09:44:26 - 1 week ago

குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!
குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். 1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த


நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

2024-07-16 08:52:54 - 1 week ago

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.


மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

2024-07-16 08:00:54 - 1 week ago

மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக,


Follow Me

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.