தங்கம் வென்று திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பான வரவேற்பு!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு டெல்லி விமான நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
ஈட்டி எறியும் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே தங்கப் பதக்கத்தைப் பெற்றுப் பெருமை சேர்த்த அரியானா வீரர் நீரஜ் சோப்ரா நாடு திரும்பினார். டெல்லியில் விமான நிலைய ஊழியர்கள், விளையாட்டுத் துறையினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இதேபோல் மல்யுத்தப் போட்டியில் வெள்ளி வென்ற ரவிக்குமார் தாகியா, வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினா ஆகியோருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Tags / குறிச்சொற்கள்:
டோக்கியோ
ஒலிம்பிக் போட்டி
நீரஜ் சோப்ரா
ஈட்டி எறியும் போட்டி
OLYMPICS
GOLD MEDALIST
JAVELIN THROWER
NEERAJCHOPRA