கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை - கனிமொழி கண்டனம்
கும்மிடிப்பூண்டி,
திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
அரசு என எதுவும் உள்ளதா?பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Tags / குறிச்சொற்கள்:
கும்மிடிப்பூண்டி
சிறுமி பாலியல் வன்கொடுமை
கொலை
கனிமொழி
கண்டனம்
CHILD
SEXUALLY ASSAULTED
MURDERED
MP KANIMOZHI
CONDEMNS