10 விக்கெட்களையும் கேட்ச்களாக எடுத்த முதல் ஆசிய அணி இந்தியா.. புதிய சாதனை!

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at ஜூன் 21, 2024 வெள்ளி || views : 218

10 விக்கெட்களையும் கேட்ச்களாக எடுத்த முதல் ஆசிய அணி இந்தியா.. புதிய சாதனை!

10 விக்கெட்களையும் கேட்ச்களாக எடுத்த முதல் ஆசிய அணி இந்தியா.. புதிய சாதனை!

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஜூன் 20ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 53, ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான் மற்றும் பரூக்கி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ஆப்கானிஸ்தான் ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. அதனால் 20 ஓவரில் அந்த அணியை 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா சூப்பர் 8 சுற்றையும் வெற்றிகரமாக துவங்கியது.

அரிதான சாதனை:
ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஓமர்சாய் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய பவுலர்களை அதிரடியாக விளையாட முயற்சித்த ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து கேட்ச்களை கொடுத்து ஆட்டமிழந்தனர்.

சொல்லப்போனால் குர்பாஸ், சாசாய், இப்ராஹிம் ஜாட்ரான், குல்பதின் நைப், அசமத்துல்லா ஓமர்சாய், நஜிபுல்லா ஜாட்ரான், முகமது நபி, கேப்டன் ரசித் கான், நூர் அஹ்மத், நவீன்-உல்-ஹக் என அந்த அணியின் 10 பேட்ஸ்மேன்களும் இந்தியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும், டி20 உலகக்கோப்பை வரலாற்றிலும் எதிரணியின் 10 விக்கெட்களையும் கேட்ச்களாக எடுத்த முதல் ஆசிய அணி என்ற அரிதான சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் இதே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்து அந்த அரிதான சாதனையை படைத்திருந்தது. அதன் பின் தற்போது ஆசிய கண்டத்திலிருந்து இந்திய அணி தான் இப்படி 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்து வினோதமான சாதனையை படைத்துள்ளது.


பொதுவாக போல்ட், ஸ்டம்பிங், எல்பிடபுள்யூ, ரன் அவுட் போன்ற பல்வேறு வகைகளில் விக்கெட்டுகளை எடுப்பது வழக்கமாகும். ஆனால் இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி ஆப்கானிஸ்தானின் 10 பேட்ஸ்மேன்களையும் கேட்ச் கொடுக்க வைத்து இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் வங்கதேசத்தை ஜூன் 22இல் சந்திக்கிறது.

2024 T20 WORLDCUP 2024 டி20 உலக கோப்பை AFGHANISTAN TEAM IND VS AFG INDIAN CRICKET TEAM MOST CATCHES UNIQUE RECORD ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணி
Whatsaap Channel
விடுகதை :

எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?


விடுகதை :

வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?


விடுகதை :

பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை

37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை

கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய

7 சிக்ஸ் 119 ரன்ஸ்.. ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வெளுத்த ஹிட்மேன்.. கெயிலை முந்தி 2வது உலக சாதனை

7  சிக்ஸ் 119 ரன்ஸ்.. ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வெளுத்த ஹிட்மேன்.. கெயிலை முந்தி 2வது உலக சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள்

அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு


கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்

கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்


செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!


வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு

வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு


தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!

தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!


prev whatsapp Twitter facebook next