2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரில் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெற்ற இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த இரண்டு அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணியும், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோத இருக்கின்றன. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் மாபெரும் இறுதி போட்டியில் மோத இருக்கின்றன.
இதுவரை நடைபெற்ற அனைத்து உலக கோப்பை தொடர்களிலும் எட்டு முறை டாப் 8 அணிகள் மட்டுமே அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளன. தற்போது முதல் முறையாக வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லப்போவது யார்? என்று பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கணிப்பில் : தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று அந்த இரண்டு அணிகளுமே இறுதிப்போட்டியில் மோதும் என்று கணித்துள்ளார்.
ஹர்பஜன் சிங் இவ்வாறு கணித்திருந்தாலும் நடைபெற்று வரும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தற்போது தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!