ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது செமி ஃபைனல் ஜூன் 27ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானா நகரில் துவங்கியது. அதில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் வெற்றி கண்ட இந்தியா மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் அணிகள் மோதின. இருப்பினும் அந்தப் போட்டி மழையால் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமானது.
ஒரு வழியாக மழை நின்றதைத் தொடர்ந்து இரவு 8.45 மணிக்கு போட்டி துவங்கப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. குறிப்பாக பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவதாலும் மழை பெய்யும் சூழ்நிலை இருப்பதாலும் முதலில் பந்து வீசுவதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அறிவித்தார். அதனால் தங்களுக்கு சாதகம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா சாதிக்குமா:
ஆனால் மறுபுறம் டாஸ் அதிர்ஷ்டம் கிடைக்காத இந்தியா முதலில் பேட்டிங் செய்வதையே எதிர்பார்த்ததாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். குறிப்பாக பிட்ச் நேரம் செல்ல செல்ல ஸ்லோவாக மாறும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர் ஆரம்பத்திலேயே பெரிய ரன்கள் அடிக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் ரோஹித் சர்மா அறிவித்தார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்களும் முதலில் பேட்டிங் செய்திருப்போம். வானிலை நன்றாக தெரிகிறது. இதுவரை எது நடந்ததோ அது நடந்து விட்டது. நாங்கள் ஆரம்பத்திலேயே அதிக ரன்கள் அடிக்க விரும்புகிறோம். போட்டி நடைபெற நடைபெற பிட்ச் ஸ்லோவாக மாறும். இது போன்ற தொடரில் விளையாடுவதன் சவாலை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்”
“இது நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதற்கான வாய்ப்பு. அதைத் தவிர்த்து நாங்கள் அதிகமாக சிந்திக்கவில்லை. நிகழ்காலத்தில் இருந்து எங்களுடைய ஆட்டத்தை செயலில் பேச வைக்க விரும்புகிறோம். எங்களுக்கு அதே அணி விளையாடுகிறது” என்று கூறினார். இதன் காரணமாக இந்தியா ஒரு வரலாற்றையும் மாற்ற வேண்டியுள்ளது.
அதாவது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் செமி ஃபைனலில் சேசிங் செய்த போட்டியில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததே கிடையாது. 2010, 2016, 2022 ஆகிய வருடங்களில் விளையாடிய 3 போட்டிகளிலும் அந்த அணி 3 வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே இம்முறை சேசிங் செய்யப் போகும் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வரலாற்றை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!