ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை கடந்து சில ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபே எளிதாக சிக்ஸர்களை விளாசக் கூடியவர் என்பதனால் சமீபகாலமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது வாய்ப்பினை பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரது சிக்ஸ் அடிக்கும் திறமை காரணமாக அவருக்கு டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் கிடைத்தது.
ஆனால் தற்போது நடைபெற்று வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அவரது ஆட்டம் மோசமாக இருந்து வருகிறது. இருப்பினும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அணியின் நிர்வாகம் அவரை நம்பி தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் முக்கியமான நேரத்தில் காலை வாருவது மட்டுமின்றி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் தவித்து வருகிறார். அதோடு அவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதனால் அவர் அணியில் எதற்காக விளையாடுகிறார் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் தற்போதைய நிலையில் இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் இவரை எதற்காக ஆல்ரவுண்டராக கூடுதலாக அணியில் வைத்திருக்க வேண்டும்? இவர் ஒரு தேவையற்ற வீரராகவே இருந்து வருகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏற்கனவே நமது அணியில் மூன்று தரமான ஆல்ரவுண்டர்கள் இருப்பதினால் ஷிவம் துபேவை நீக்கிவிட்டு நன்றாக பேட்டிங் தெரிந்த சஞ்சு சாம்சனுக்கு இறுதிப்போட்டியில் வாய்ப்பை வழங்கலாம் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரில் நன்கு பேட்டிங் தெரிந்த சஞ்சு சாம்சன் இருப்பது அணியின் பேட்டிங் பலத்தையும் அதிகரிக்கும் என்றும் சாம்சன் அவர்கள் மிடில் ஓவரில் நன்றாக நிலைத்து நின்று பெரிய ஸ்கோருக்கான அடித்தளத்தை கட்டமைக்க முடியும் என்பதனால் துபேவை தூக்கிவிட்டு சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!