ஜிம்பாப்வே நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த சூழ்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் நான்காவது போட்டி ஜூலை 13ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹராரே நகரில் துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு நிதானமாக விளையாடிய ஓப்பனிங் ஜோடி 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது. ஆனால் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடத் தவறிய அந்த ஜோடியில் மருமணி 32 (31) ரன்களிலும் வேஸ்லி 25 (24) ரன்களிலும் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர்.
இந்தியா வெற்றி:
போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த பிரையன் பெனட் 9 (14), ஜான் கேம்பல் 3 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் 4வது இடத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய கேப்டன் சிக்கந்தர் ராசா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 46 (28) ரன்கள் எடுத்த போது தேஷ்பாண்டே வேகத்தில் அவுட்டானார். இறுதியில் டியோன் மேயர்ஸ் 12, க்ளைவ் 7, பாரஸ் கான் 4* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ஜிம்பாப்வே 152/7 மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் கலீல் அஹ்மத் 2, வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, அபிஷேக் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 153 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் – கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதில் சுப்மன் கில் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் ஜெய்ஸ்வால் தம்முடைய பாணியில் அடித்து நொறுக்கி ரன்களை குவித்து வேகமாக அரை சதமடித்தார்.
அவருடன் சேர்ந்து நிதானமாக விளையாடிய கில் ஒரு கட்டத்திற்கு பின் அதிரடியாக விளையாடி தனது பங்கிற்கு சதமடித்தார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 13 பவுண்டரி 2 சிக்சருடன் 93* (53), கில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 58* (39) ரன்களும் எடுத்தனர். அதனால் 15.2 ஓவரில் 156/0 ரன்கள் எடுத்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
இதையும் படிங்க: 4வது ஜிம்பாப்வே போட்டியில் அறிமுகமான சிஎஸ்கே வீரர்.. கில் முடிவால் என்ன ஆகுமோ என ரசிகர்கள் கலக்கம்
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 150+ ரன்கள் இலக்கை 1 விக்கெட் கூட இழக்காமல் எட்டிப் பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அத்துடன் வரலாற்றில் இரண்டாவது முறையாக 8 வருடங்கள் கழித்து ஒரு டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா சாதனை வெற்றி பெற்றுள்ளது. அதனால் 3 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா கடைசி போட்டிக்கு முன்பாகவே இத்தொடரை வென்றுள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் தோற்ற பின் அங்கிருந்து மீண்டெழுந்து முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வென்றுள்ள இந்தியா தங்களை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது.
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!