POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

பாவம் பாண்டியா.. கம்பீர் தான் பாண்டியாவை கழற்றி விட்டுள்ளார்.. கம்பீரின் தவறை விமர்சித்த ஸ்ரீகாந்த்

1 year ago 20 ஜூலை 2024 12:47 AM | views : 210
விரைவில் துவங்கும் இலங்கை டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2022க்குப்பின் ரோஹித் ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட்டார்.

அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் துணை கேப்டனாகவும் அவரே செயல்பட்டார். அதனால் ஐபிஎல் தொடரில் மும்பை அணியை போல ரோஹித்துக்குப் பின் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பரிந்துரையால் அவரை துணை கேப்டனாக கூட அறிவிக்காத தேர்வுக்குழு சூரியகுமார் யாதவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.


அத்துடன் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமித்துள்ளதை வைத்து கம்பீர் தான் பாண்டியாவை கழற்றி விட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த கேப்டனை உருவாக்குவதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா டி20 உலக கோப்பையின் துணை கேப்டன். நாம் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளோம். எனவே இயற்கையாக துணை கேப்டனாக இருந்தவர் தற்போது கேப்டனாக வேண்டும். சூரியகுமார் எனக்கு பிடிக்கும். ஆனால் இங்கே நியாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை தற்போது உங்களை நாங்கள் கேப்டனாக விரும்பவில்லை என்று பாண்டியாவிடம் தேர்வுக்குழு சொல்லியிருக்கலாம்”

“அப்படியானால் ஏன் அவரை டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக நியமித்தீர்கள்? இப்போது அவரை நீக்கி விட்டு சுப்மன் கில்லை நியமித்துள்ளது எனக்குப் புரியவில்லை. ஏனெனில் கில் என்னுடைய அணியில் கூட இருக்க மாட்டார். நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருப்பேன். நீங்கள் அடுத்த தலைமுறையை மிகவும் மிருதுவாக உருவாக்க வேண்டும்”

“எடுத்துக்காட்டாக தோனி தலைமையில் விராட் துணை கேப்டனாக இருந்தார். தோனிக்குப்பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் ரோஹித் துணை கேப்டனாக இருந்தார். ரோகித் தலைமையில் துணைக் கேப்டனாக இருந்த பாண்டியா தற்போது கேப்டனாகவும் சூர்யா துணை கேப்டனாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஹர்திக் பாண்டியா பாவம். 2024 டி20 உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டராக சிறப்பாக விளையாடிய அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்”


“அப்படிப்பட்ட அவரை நீக்கியுள்ள நீங்கள் கில்லை துணைக் கேப்டனாக நியமித்துள்ளீர்கள். இப்படி செய்வது இந்திய அணிக்கு நல்லதல்ல. எனவே பாண்டியாவுக்காக வருந்துகிறேன். அதே சமயம் நான் சூரியகுமாரின் ரசிகன். கேப்டனாக அவர் அசத்துவதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP AMMK ADMK ANNAMALAI தவெக ANBUMANI RAMADOSS MK STALIN TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் தமிழக வெற்றிக் கழகம் PMK பாமக முக ஸ்டாலின் AIADMK பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் கைது இந்திய அணி UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் காங்கிரஸ் கோவை தமிழகம் சட்டசபை தேர்தல் தேவர் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE திருமாவளவன் KEERTHY SURESH கொலை வடகிழக்கு பருவமழை வன்னியர் அமமுக பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI SURIYA AJITH தென்காசி NELLAI தமிழ்நாடு நெல்லை சீமான் தீபாவளி OPS TAMIL ACTRESS PARLIAMENT ELECTION ஓபிஎஸ் கள்ளக்காதல் மதுரை MADURAI விடுமுறை CSK TAMILAGA VETTRI KAZHAGAM PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா தூத்துக்குடி பாலியல் தொல்லை அன்புமணி NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் அஜித் கீர்த்தி சுரேஷ் THIRUMAVALAVAN ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION BIGG BOSS TAMIL