கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். மருத்துவமனையின் கண்காணிப்பு கேமரா காட்சிகள், பெண் மருத்துவரின் சடலம் அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ‘ப்ளுடூத்’ கருவி ஆகியவற்றின் அடிப்படையில், சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டாா்.
பெண் மருத்துவா் கொல்லப்பட்ட வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்வதற்கு கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதியை வழங்கியது.
33 வயதான சஞ்சய் ராய்க்கு 4 முறை திருமணமாகியுள்ளதாகவும், அவர் பெண் பித்துப் பிடித்த நபர் என்பதும், குத்துச்சண்டை பயிற்சி பெற்றுள்ளதுடன் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராக சஞ்சய் ராய் பணியாற்றியுள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்..
இந்த நிலையில், சம்பவத்தன்று(ஆக. 9) கொல்கத்தா மருத்துவமனை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சஞ்சய் ராய், ஆக. 9-ஆம் தேதியன்று நள்ளிரவு 1 மணியளவில் மருத்துவமனைக்குள் நுழைவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. மேலும், கழுத்தில் ‘ப்ளுடூத்’ கருவி மாட்டிக்கொண்டிருந்த சஞ்சய் ராய் உயிரிழந்த பெண் மருத்துவரையும், இரவில் அவருடனிருந்த மருத்துவர்களையும், சஞ்சய் ராய் நோட்டமிடும் காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு கொல்கத்தாவின் சோனாகச்சி பகுதிக்கு மது அருந்திவிட்டு போதையில் சென்ற சஞ்சய் ராய், அங்கு பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் உடலுறவு வைத்திருந்ததாகவும், அதன்பின் மறுநாள் அதிகாலை 1 மணியளவில் ஆர். ஜி. கர் மருத்துவமனைக்கு அவர் சென்றிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணையில், நீதிமன்ற உத்தரவுப்படி, சிறை வளாகத்தில் இன்று(ஆக. 24) சஞ்சய் ராய்க்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர். ஜி. கர் மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரங்களை, மாநில அரசு சாா்பில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இன்று(ஆக. 24) சிபிஐயிடம் சமர்ப்பித்துள்ளதாக கொல்கத்தா காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!