இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். அவருடைய தலைமையில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார்.
முன்னதாக பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் காலை தூக்கினாலும் உடனடியாக ஸ்டம்பிங் செய்வதில் தோனி சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் திரும்பி பார்க்காமலேயே அதிர்ஷ்டத்துடன் ரன் அவுட் செய்வது, கடைசி நேரத்தில் ஒற்றை கையுறையை கழற்றி விட்டு கீப்பிங் செய்வது போன்ற அவருடைய டெக்னிக் பலருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
அதே போல நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்வதிலும் தோனி வல்லவராக அறியப்படுகிறார். குறிப்பாக நிறைய பரபரப்பான தருணங்களில் கேட்ச், எல்பிடபுள்யூ போன்ற தீர்ப்புகளை அம்பயர்கள் சரியாக கவனிக்காமல் துல்லியமாக வழங்க மாட்டார்கள். ஆனால் விக்கெட் கீப்பராக இருக்கும் தோனி அதை சரியாக கவனித்து அம்பயரின் தீர்ப்பை எதிர்த்து ரிவியூ எடுப்பார். அதை சோதித்துப் பார்க்கும் போது 90% நேரங்களில் தோனி நினைத்தது போல நடுவர்கள் வழங்கிய தீர்ப்பை மாற்றி வழங்குவார்கள்.
அதனால் “டிசிஷன் ரிவ்யூ சிஸ்டம்” எனப்படும் டிஆர்எஸ் விதிமுறையை ரசிகர்கள் “தோனி ரிவ்யூ சிஸ்டம்” என்று பாராட்டுவது வழக்கமாகும். இந்நிலையில் ரசிகர்கள் கூறுவது போல தோனி எப்போதுமே துல்லியத்திற்கும் நெருக்கமான டிஆர்எஸ் முடிவுகளை எடுப்பார் என்று இந்தியாவின் பிரபல அம்பயர் அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார். அத்துடன் கீப்பருக்கு முன்பாக பேட்ஸ்மேன்கள் இருப்பதால் பல நேரங்களில் அவர்களால் பந்தை பார்ப்பது சவாலாக இருக்கும் என்றும் அனில் சவுத்ரி கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனி மிகவும் துல்லியமானவர். அவருடைய அழைப்புகள் கிட்டத்தட்ட துல்லியத்திற்கும் மிகவும் நெருக்கமாக இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு பின்னால் இருப்பதால் விக்கெட் கீப்பர்களால் சில நேரங்களில் பவுலர்களின் பொசிஷனை (இடம்) சரியாகப் பார்க்க முடியாது”
“அது வித்தியாசமானது. இருப்பினும் தோனி எடுக்கும் முடிவுகள் காரணம் மிகுந்ததாக இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 42 வயதாகும் தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் ஏல விதிமுறைகள் வந்த பின் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது பற்றி முடிவெடுக்க உள்ளதாக தோனி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!