சென்னை ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே சாலை, ஜெ.ஜெ.தெரு, அம்புஜம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக வலம் வருவதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணா மேம்பாலத்தின் கீழும், ஆழ்வார்ப்பேட்டை பாலத்துக்கு கீழும் மர்ம நபர் சுற்றித் திரிவது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்கள் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபடுகிறார்.
பொதுமக்கள் பிடிக்க முயற்சிக்கும் போது, அவர்கள் மீதும் கற்களை வீசி தாக்கி விட்டு பயங்கர சத்தத்துடன் சிரிக்கவும் செய்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனால் மர்ம நபரை நெருங்கவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக நிர்வாண சைக்கோவின் அட்டகாசங்கள் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆழ்வார்ப்பேட்டையில் தற்போது வரை விலை உயர்ந்த 35 கார்களை சேதப்படுத்தி இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் சுமதியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களை நிர்வாண சைக்கோ கற்களால் தாக்கி சேதப்படுத்தி இருக்கிறார். இதையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சுமதி புகார் கொடுத்துள்ளார்.
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!