நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இவரது சினிமா வாழ்க்கையில் 68வது படம். நேற்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதைப்போல், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. இந்நிலையில் படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் கோட் படம், அவரது சினிமா வாழ்க்கையில் கடைசி இரண்டாவது படமாக அமைந்துள்ளது. படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் பார்த்த ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடித் தீர்த்தனர்.
தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் சோலோவாக ரிலீஸ் ஆனது. இதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 5000 திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என மொத்தம் ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியது. படக்குழு வெளியிட்ட பாடல்களில் மட்ட பாடல் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதேபோல் சின்ன சின்ன கண்கள் பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாடல் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது.
படத்தில் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதமாக படத்தில் ஆங்காங்கே சில காட்சிகளும் பின்னணி இசைகளும் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் தோனி, அப்போது இசைக்கப்படும் படையப்பா தீம், அதன் பின்னர் இசைக்கப்படும் மங்காத்தா தீம் என அனைத்துமே ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும் க்ளைமேக்ஸில் வரும் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மட்ட பாடலுக்கு த்ரிஷா வந்து நடனமாடியது என அனைத்துமே திரையரங்கில் தீபாவளிதான்.
படத்திற்கு தமிழ்நாட்டில் ரசிகர்களுக்கான அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை படல் இடங்களில் முதல் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு படத்திற்கான அனைத்து காட்சிகளுக்கும் பெரும்பான்மையான தியேட்டர்களில் விற்றுத் தீர்ந்துவிட்டது.
படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 45 கோடிகள் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 38 கோடியும், மலையாளத்தில் கிட்டத்தட்ட ரூபாய் 2 கோடியும், தெலுங்கில் இரண்டு கோடியும் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. மொத்தத்தில் படம் முதல் நாளே நல்ல வசூல் குவித்துள்ளதால், ரசிகர்களும் படக்குழுவினரும் கூறியதைப்போல் படம் ரூபாய் 1000 கோடி வசூலை படைத்த முதல் தமிழ் படம் என்ற சாதனையைப் படைக்கும் என கூறப்படுகின்றது. ஆனால் இது விஜய் நடிப்பில் வெளியான முந்தையப் படமான லியோவின் முதல் நாள் வசூலை விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
எடப்பாடி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் நேற்று மீண்டும் புறக்கணித்தார். அதன் எதிரொலியாக செங்கோட்டையனின் எம்எல்ஏ மற்றும் கட்சி பதவிகளை பறிக்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்களால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு
சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த மாதம் கோவையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் புறக்கணித்தார். அன்று முதல் செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும்
சென்னை: ரமலான் மாதத்தையொட்டி, தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு தவெக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் மாலை 5 மணியளவில் வருகை தந்தார். விஜய்யை காண அதிக அளவில் பொதுமக்கள்
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று நோன்பு திறந்து வைக்கிறார். மேலும், நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கும் அவர் விருந்தளிக்க உள்ளார். இந்நிலையில், நளை நடைபெறவுள்ள நோன்பு நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை
விஜயலட்சுமி விவகாரம் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், சீமானுக்கு எதிரான வழக்கை புலன் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து
மாமல்லபுரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் கிஷோர், "தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பிரசாந்த்
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்று வருகிறது. முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக 'கெட்அவுட்' கையெழுத்து இயக்கம் என்று வைக்கப்பட்டுள்ள பேனரில் த.வெ.க. தலைவர்
சென்னை, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 2-ம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெறுகிறது. தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. விழா அரங்கிற்குள் விஜய் காலை 10 மணியளவில் வருவார் என்று கூறப்படுகிறது.
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!