ராதாபுரம்: சிறுவனைக் கொன்று வாஷிங் மெஷினில் மறைத்துவைத்த பக்கத்து வீட்டுப் பெண் கைது

By Admin | Published in செய்திகள் at செப்டம்பர் 10, 2024 செவ்வாய் || views : 537

ராதாபுரம்: சிறுவனைக் கொன்று வாஷிங் மெஷினில் மறைத்துவைத்த பக்கத்து வீட்டுப் பெண் கைது

ராதாபுரம்: சிறுவனைக் கொன்று வாஷிங் மெஷினில் மறைத்துவைத்த பக்கத்து வீட்டுப் பெண் கைது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சியில் 3 வயது சிறுவனைக் கொன்று, சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்..

ஆத்துகுறிச்சி கீழத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இவா்களது 2ஆவது மகன் சஞ்சய் (3), அருகேயுள்ள அங்கன்வாடிக்குச் சென்றுவந்தாா்.. திங்கள்கிழமை காலை அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்வதற்காக ரம்யா தேடியபோது சஞ்சயைக் காணவில்லை. அப்பகுதியில் உள்ள வீடுகள், தண்ணீா்த் தொட்டிகளில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை..

இதுதொடா்பாக, ரம்யா அளித்த புகாரின்பேரில் ராதாபுரம் போலீஸாா் வந்து சிறுவனை வீடுவீடாகத் தேடினா். அப்போது, ரம்யாவுக்கும் பக்கத்து வீட்டைச் சோ்ந்த தங்கம்மாளுக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகத் தெரியவந்தது.. இதையடுத்து, போலீஸாா் தங்கம்மாள் வீட்டில் தேடினா். வாஷிங் மெஷினில் இருந்த சாக்கு மூட்டையைப் பிரித்துப் பாா்த்தபோது, அதற்குள் சஞ்சய் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. தங்கம்மாள் முன்விரோதம் காரணமாக சஞ்சயைக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி, வாஷிங் மெஷினில் மறைத்து வைத்ததாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், வள்ளியூா் டி.எஸ்.பி. யோகேஷ்குமாா் ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.தங்கம்மாளின் மகன் சில மாதங்களுக்கு முன்பு நேரிட்ட விபத்தில் இறந்ததாகவும், அப்போதிலிருந்து அவா் யாரிடமும் அதிகமாகப் பேசுவதில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்தனா்..

ராதாபுரம்
Whatsaap Channel
விடுகதை :

பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?


விடுகதை :

ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


விடுகதை :

வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?


தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு


ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்


ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்


பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்


அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.

அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next