மணிப்பூரில் மீண்டும் வன்முறை: மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு

By Admin | Published in செய்திகள் at செப்டம்பர் 10, 2024 செவ்வாய் || views : 257

 மணிப்பூரில் மீண்டும் வன்முறை: மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு

இம்பால்: மணிப்பூரில் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள காரணத்தால் மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் சமீபத்திய வன்முறை சம்பவங்கள் மற்றும் போராட்டங்கள் காரணமாக மீண்டும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தீவிர வன்முறையின் காரணமாக, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் தௌபால் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






முன்னதாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மாவட்ட நீதிபதிகள் அந்தந்த மாவட்டங்களில் காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதாக அறிவித்தனர். ஆனால், மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமமடைந்துள்ளதன் காரணமாக, ஊரடங்கு தளர்வு உத்தரவு இன்று காலை 11 மணி முதல் ரத்து செய்யப்பட்டு, ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. ஆனால், ஊடகங்கள், மின்சாரம், நீதிமன்றம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு ஊரடங்குச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங்கில் செப்டம்பர் 6ம் தேதி ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடந்தது. இதன் விளைவாக மணிப்பூரின் முதல் முதல்வர் மைரெம்பம் கொய்ரெங் சிங்கின் வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்தார்.






செப்டம்பர் 7 ஆம் தேதி மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நீண்ட தூர ராக்கெட்டுகள் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதை குக்கி தீவிரவாதிகள் வீசியதாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன. மேலும், ஒருவரின் வீட்டிற்குள் தீவிரவாதிகள் நுழைந்து சுட்டுக் கொன்ற சம்பவமும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் ரோந்து மற்றும் வான்வழி ஆய்வு நடத்துவதற்காக ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. இப்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் கே கபீப் கூறினார்.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இம்பால் பள்ளத்தாக்கில் மேதி மற்றும் குக்கி இனக்குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.







மணிப்பூர் வன்முறை ஊரடங்கு உத்தரவு ட்ரோன் தாக்குதல் வடகிழக்கு இந்தியா MANIPUR VIOLENCE CURFEW DRONE ATTACK NORTH EAST INDIA
Whatsaap Channel
விடுகதை :

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


விடுகதை :

பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?


விடுகதை :

உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?


ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி

ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி


பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை

பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை


பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்


2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி  இந்தியா அபார வெற்றி


Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?

Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next