குடியிருப்பு பகுதிக்குள் நின்று செல்போனில் பேசியபடியே சுயஇன்பத்தில் ஈடுபட்ட நபரின் ஷாக் காட்சி வெளியாகியுள்ளது.
கோவை பாப்பநயக்கன் பாளையம் மாநகராட்சி பள்ளி அருகில் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசுவது போல் நின்று வீதியில் சுய இன்பத்தில் ஈடுபட்டு வரும் கேவளமான நிகழ்வு நடைபெற்று உள்ளது.
இதை அந்த வழியாக செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும் ஒருவர் மட்டும் இந்த ஆபாச ஆசாமியை குச்சியால் அடித்து விரட்டி உள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள நிலையில் தற்போது சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆபாச ஆசாமியை பிடித்து கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்து உள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S