வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி உச்சகட்டத்தை தொட்டுள்ளது. கான்பூரில் செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 107* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 285-9 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. குறிப்பாக மழையால் 2, 3வது நாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் வங்கதேச பவுலர்களை இந்தியா அடித்து நொறுக்கியது. அதனால் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்கள் குவித்த அணியாக இந்தியா உலக சாதனையும் படைத்தது.
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72, விராட் கோலி 47, கேஎல் ராகுல் 68 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் களமிறங்கிய வங்கதேசம் 4வது நாள் முடிவில் 26-2 ரன்கள் எடுத்து இன்னும் இந்தியாவை விட 26 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் ரோஹித் சர்மாவுடன் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 12 பவுண்டரி 2 சிக்சருடன் 72 (52) ரன்களை 141 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார்.
குறிப்பாக 31 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த இந்திய துவக்க வீரர் என்ற ஜாம்பவான் வீரேந்திர சேவாக் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சேவாக் 32 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். ஒட்டுமொத்தமாக ரிஷப் பண்ட் (28), கபில் தேவ் (30) ஆகியோருக்கு பின் 3வது அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சர்துள் தாக்கூர் (தலா 31 பந்துகள்) சாதனையையும் ஜெய்ஸ்வால் சமன் செய்தார்.
இது போக 2023 – 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை ஜெய்ஸ்வால் 1166 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு குறிப்பிட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற அஜிங்க்ய ரஹானே சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2019 – 21 தொடரில் ரகானே 1159 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
மேலும் இப்போட்டியில் ஜெய்ஸ்வால் முதல் 10 ஓவர்களில் 63 ரன்கள் அடித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் முதல் 10 ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய மற்றும் ஆசிய வீரர் ஆகிய 2 சாதனைகளை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. கிறிஸ் கெயில்: 69, நியூசிலாந்துக்கு எதிராக, 2014
2. யசஸ்வி ஜெய்ஸ்வால்: 63, வங்கதேசத்துக்கு எதிராக, 2024*
3. முகமத் அஸ்ரபுல்: 57, இந்தியாவுக்கு எதிராக, 2007
4. பென் ஸ்டோக்ஸ்: 57, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2024
5. ரோஹித் சர்மா: 56, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2023
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!