சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதிலிருந்து அவருடைய உடல்நிலை பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன.
சமீபத்திய தகவலாக இவருடைய அடிவயிற்றில் உள்ள ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டதாகவும் இதற்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன. இவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரஜினியின் உடல்நிலை பற்றி நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்துக்குப் பிரத்யேக தகவல் அளித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி, "நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை நலமாக உள்ளது. அவருடைய உடல்நிலை குறித்து தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அச்சப்படக்கூடிய வகையில் எதுவும் இல்லை.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், பெரிதளவில் அறுவைச் சிகிச்சை ஏதும் அவருக்குச் செய்யப்படவில்லை. ரஜினியின் உடல்நிலை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகிகளும் மருத்துவத் துறை அதிகாரிகளும் தொடர்பிலிருக்கிறார்கள்" என்று தகவல் அளித்திருக்கிறார் மா. சுப்பிரமணியன்.
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!