INDIAN 7

Tamil News & polling

களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

By E7 Tamil 25 அக்டோபர் 2024 05:52 AM
Nature

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை சில இடங்களில் இடி-மின்னலுடனும், சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று அங்கு மழை இல்லை. மாறாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து கொண்டே இருப்பதால் பாதுகாப்பு காரணமாக சூழல் சுற்றுலா தலமான களக்காடு தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கி களக்காடு வனச்சரக அலுவலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

களக்காடு சுற்று வட்டாரத்தில் அதிகபட்சமாக 9.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. அணைகளை பொறுத்தவரை சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. பாபநாசத்தில் 3 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

தென்காசி மாவடடத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் பகலில் வெயில் அடித்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. கடனா அணை பகுதியில் மட்டும் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டும் பரவலாக மழை பெய்தது. அங்கு 9 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஓட்டபிடாரத்தில் 2 மில்லி மீட்டரும், தூத்துக்குடியில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.



Whatsaap Channel


Image தேனி, தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் வருடம் முழு வதும் நீர்வரத்து இருக்கும். இதனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை - மாவட்ட எஸ்.பி. தகவல்

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை - மாவட்ட எஸ்.பி.


கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன்


நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள


திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள்


உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத விஷயம்!

உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத



Tags

விஜய் DMK Vijay TVK அதிமுக திமுக ADMK சென்னை கனமழை பாஜக தவெக திருமாவளவன் வடகிழக்கு பருவமழை Chennai அண்ணாமலை Annamalai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon BJP தமிழக வெற்றிக் கழகம் Thirumavalavan சீமான் தவெக மாநாடு MK Stalin தீபாவளி AIADMK வானிலை ஆய்வு மையம் PMK தமிழக வெற்றிக்கழகம் Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran மழை இந்திய அணி indian cricket team மு.க.ஸ்டாலின் AMMK Edappadi Palaniswami தமிழக அரசு Tamil Nadu Rain விசிக பாமக செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam தவெக விஜய் பிரதமர் மோடி rain தமிழ்நாடு வேட்டையன் Ajith அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss Rajinikanth VCK PM Modi IMD Udhayanidhi Stalin GetOut Stalin Sengottaiyan வானிலை அமரன் Tirunelveli ராமதாஸ் இந்தியா TVK Vijay நடிகை கஸ்தூரி Ind vs Nz காங்கிரஸ் GetOut Modi Vettaiyan Heavy Rain மதுரை M.K. Stalin திமுக அரசு Ramadoss தனுஷ் கோலிவுட் கைது ரஜினிகாந்த் திருச்செந்தூர் டிடிவி தினகரன் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் விடுமுறை