பெங்களூரு:
கர்நாடகாவில் வீட்டிற்குள் புகுந்து விளையாடிக்கொண்டிருந்த 2 குழந்தைகளை மர்மநபர்கள் கடத்திச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்க்கும் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் இரண்டு பேர் வீட்டிற்குள் ஓடிச்சென்று 3 மற்றும் 4 வயதுடைய குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு ஓடுகின்றனர். அப்போது அவர்களுக்காக காத்திருந்த காரில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று விடுகின்றனர்.
முன்னதாக, குழந்தைகள் கடத்துவதற்கு திட்டமிட்ட 2 பேரும் குழந்தைகள் மழலையர் பள்ளியில் இருந்து வரும்வரை காத்திருந்து தங்களது திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.
குழந்தைகளின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் தொழில் போட்டி காரணமாக குழந்தைகள் கடத்தப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், குழந்தைகளை கடத்தியவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
குழந்தைகள் கடத்தப்பட்டது தொடர்பாக உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார் சிசிடிவி-யில் பதிவான வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து காரை போலீசார் மடக்கினர். அப்போது அந்த மர்மகும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. தாக்குதலை தடுத்து நிறுத்த கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் 2 போலீசார் காயம் அடைந்தனர். இருப்பினும் போலீசார் குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
#WATCH | Karnataka: Kidnapping of two children, aged 3 and 4 years, in Belagavi district was caught on CCTV. Belagavi police launched a manhunt for two kidnappers who arrived in a car, entered a home with weapons, kidnapped two children and escaped in a car. The parents of the… pic.twitter.com/D36U4plaf3
— ANI (@ANI) October 25, 2024
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
இருட்டு கடை அல்வாவை சுவைத்த முதல்வர்!
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்
உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!
வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!