INDIAN 7

Tamil News & polling

கண்களுக்கு விருந்து படைத்த இரட்டை வானவில், வானில் நடந்த அதிசயம்

By E7 Tamil 15 நவம்பர் 2024 04:49 AM
Nature

சென்னை:

நீல வானம்.. அண்ணாந்து பார்த்து கண்களை ஓடவிடும் கவிஞர்களுக்கு கவிதைகள் படைக்கும் மைதானமாக விளங்கி வருகிறது. கவிஞர் வைரமுத்து தான் எழுதிய முதல் பாடலான "இது ஒரு பொன்மாலை பொழுது.." பாடல் வரிகளிலேயே, "வானம் எனக்கொரு போதிமரம். நாளும் எனக்கது சேதி தரும்" என்று சிலாகித்து இருப்பார்.

நீல வானில், இரவு நேரத்தில் நிலா, நட்சத்திர கூட்டங்கள் அலங்கரித்தாலும், பகல் நேரத்தில் பஞ்சு போன்ற வெண் மேகக் கூட்டங்கள் மட்டுமே காட்சி அளிக்கும். ஆனால், எப்போதாவது தோன்றும் வானவில், வானில் வர்ணஜாலம் காட்டி கண்களுக்கு விருந்து படைப்பது பார்ப்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தும். அதுவே, இரட்டை வானவில்லாக தோன்றினால், இரட்டை சந்தோஷம்தான். அப்படியொரு காட்சி நேற்று மாலை சென்னையில் தோன்றி மக்களின் கண்களுக்கு விருந்து படைத்தது.

பொதுவாக வானவில் என்பது மழை பெய்வதற்கு முன்னும், பின்னும் காலை மற்றும் மாலை நேரங்களில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். அதாவது, காலையில் மேற்கு திசையிலும், மாலையில் கிழக்கிலும் தோன்றும். நண்பகல் நேரத்தில் வானவில் தோன்றாது.

இனி வானவில் எப்படி தோன்றுகிறது என்பதை பற்றி பார்ப்போம். சூரிய ஒளியானது காற்றில் உள்ள மழைத்துளிகளில் பட்டு ஒளிவிலகல், எதிரொளிப்பு மற்றும் ஒளிச் சிதறல் ஆகிய இயற்பியல் மாற்றங்களுக்கு உள்ளாகி 7 வண்ணங்களாக (ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு) வில்போல் வளைந்து வானவில்லாக தோன்றுகிறது.

இரட்டை வானவில் என்பது, ஒளியானது மழைத்துளியினுள் நுழைந்து வெளியேறும் முன்பு 2 முறை பிரதிபலிப்படையும்போது தோன்றுகிறது. இரட்டை வானவில் தோன்றும்போது இரண்டாவது வானவில்லில் ஊதா நிறம் வெளியேயும், சிவப்பு நிறம் உட்புறமாகவும் இருக்கும்.

அப்படியொரு காட்சியைத்தான் நேற்று சென்னைவாசிகள் தூறிய சாரல் மழைக்கும், மிதமான வெயிலுக்கும் இடையே வானில் கண்டு ரசித்து பரவசம் அடைந்தார்கள்.

இதற்கு முன்பு சென்னையில் இரட்டை வானவில் கடந்த மே 16, ஜூன் 10 ஆகிய தேதிகளிலும், கோவையில் ஜூன் 8-ந் தேதியும், பெங்களூருவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதியும் இதேபோல் தோன்றியது குறிப்பிடத்தக்கது.



Whatsaap Channel


வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில் மனு

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில்


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு


குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று


திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த



Tags

விஜய் DMK Vijay அதிமுக TVK திமுக ADMK சென்னை கனமழை திருமாவளவன் தவெக பாஜக வடகிழக்கு பருவமழை அண்ணாமலை Chennai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon Annamalai தமிழக வெற்றிக் கழகம் BJP Thirumavalavan தவெக மாநாடு MK Stalin சீமான் தீபாவளி வானிலை ஆய்வு மையம் AIADMK தமிழக வெற்றிக்கழகம் PMK Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran இந்திய அணி தமிழக அரசு மு.க.ஸ்டாலின் Edappadi Palaniswami indian cricket team Tamil Nadu AMMK மழை விசிக பிரதமர் மோடி Tamilaga Vettri Kazhagam Anbumani Ramadoss Rain பாமக PM Modi அன்புமணி ராமதாஸ் தவெக விஜய் செங்கோட்டையன் Udhayanidhi Stalin தமிழ்நாடு Ajith வேட்டையன் VCK Rajinikanth IMD காங்கிரஸ் இந்தியா ராமதாஸ் Ind vs Nz நடிகை கஸ்தூரி அமரன் TVK Vijay GetOut Stalin rain Ramadoss Tirunelveli திமுக அரசு GetOut Modi ரஜினிகாந்த் தனுஷ் Sengottaiyan திருநெல்வேலி M.K. Stalin Heavy Rain Vettaiyan விடுமுறை மதுரை கோலிவுட் வானிலை திருச்செந்தூர் கைது நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரன்