நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று (நவ. 27) தீர்ப்பளித்துள்ளது. .ஒருமித்த கருத்தின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு முன்பு தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து கோரிய வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் இருவரும் தற்போது அதிகாரப்பூர்வமாக பிரிந்துள்ளனர்.
திருமண உறவிலிருந்து பிரிவதாக ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இருவரும் இருந்ததால், அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி சுபாதேவி தீர்ப்பளித்துள்ளார்..விவாகரத்துக் கோரி மனுதமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியான தனுஷ் - ஐஸ்வர்யா, கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிவதாக கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.எனினும் கடந்த ஏப்ரல் மாதம் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடினர். இம்மனுவை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், இருவரையும் நேரில் ஆஜராகக்கோரி மூன்று முறை சம்மன் அனுப்பியது.
இருந்தபோதும் இருவரும் ஆஜராகாததால், மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது..இதனிடையே, தனுஷ், ஐஸ்வர்யாவிடம் கடந்த 21ஆம் தேதி தனி அறையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு நவ.27 ஆம் தேதி வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.இதன்படி, இருவருக்கும் விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. இதன்மூலம் இவர்களின் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.இதையும் படிக்க | 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு. ****'
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
திருமணமான ஆண் மற்றும் பெண் தங்கள் திருமணத்தை மீறி விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருமணமான பெண்ணை கவர்ந்ததாக திருமணமான ஆண் ஒருவருக்கு எதிரான வழக்கு அண்மையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிபாஸ் ரஞ்சன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய அவர், "ஆரம்பத்திலிருந்தே சம்மதத்துடன் கூடிய
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!