கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் அளித்துள்ளார் நடிகர் அஜித்!

தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித், ரூ.25 லட்சம் அளித்துள்ளார். நாட்டில் கொரோனா 2வது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்துக்கு நடிகர் அஜித், ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியளித்தார்.

தமிழக அரசின் செய்தி ஊடகத்துறை 2.5 கோடி என தவறுதாக குறிப்பிட்டு பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பியிருந்தது. தற்போது அதை திருத்தி 25 லட்சமாக செய்தி வெளியிட்டுள்ளது.


பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel