Tamil News & polling
இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பில் சால்ட் 26 ரன்களில் அவுட்டானார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய பென் டக்கெட் 65 (56) ரன்கள் விளாசி அசத்தினார். மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் நேர்த்தியாக விளையாடி அரை சதத்தை அடித்து 69 ரன்கள் எடுத்தார். அதே போல ஹரி ப்ரூக் 31, கேப்டன் ஜோஸ் பட்லர் 34, லியம் லிவிங்ஸ்டன் 41 ரன்கள் குவித்தர்கள். இறுதியில் அடில் ரசித் 14 ரன்கள் எடுத்த போதிலும் 49.5 ஓவரில் இங்கிலாந்து 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக 305 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா – சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி அசத்தினார்கள். நேரம் செல்ல செல்ல இருவருமே அரை சதமடித்து 136 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த போது கில் 60 (52) ரன்கள் விளாசி அவுட்டானார்.
அடுத்ததாக வந்த விராட் கோலி 5 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் பட்டாசாக விளையாடிய ரோஹித் சர்மா 32வது ஒருநாள் சதத்தை அடித்து மிரட்டினார். தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருப்பதால் ஓய்வு பெறுமாறு விமர்சனங்களை சந்தித்த அவர் தனது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன் ஃபார்முக்கு திரும்பினார். 37 வயதில் 12 பவுண்டரி 7 சிக்ஸருடன் 119 (90) ரன்களை அடித்த அவர் வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.
இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த ரோகித் உலக சாதனை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. ஷாஹித் அப்ரிடி: 351
2. ரோஹித் சர்மா: 338*
3. கிறிஸ் கெயில்: 331
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 44, பாண்டியா 10, ராகுல் 10 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இறுதியில் மறுபுறம் நன்றாக விளையாடிய அக்சர் படேல் 41, ஜடேஜா 11* ரன்கள் எடுத்தனர். அதனால் 44.3 ஓவரில் 308-6 ரன்கள் எடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரையும் ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜெமி ஓவர்டன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத
வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு
குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று
திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா
விஜய் DMK Vijay அதிமுக TVK திமுக ADMK கனமழை சென்னை தவெக பாஜக திருமாவளவன் அண்ணாமலை Chennai வடகிழக்கு பருவமழை Annamalai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon BJP தமிழக வெற்றிக் கழகம் Thirumavalavan சீமான் MK Stalin தவெக மாநாடு தீபாவளி வானிலை ஆய்வு மையம் Seeman AIADMK TVK Conference தமிழக வெற்றிக்கழகம் PMK இந்திய அணி உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் TTV Dhinakaran தமிழக அரசு மழை Tamil Nadu மு.க.ஸ்டாலின் AMMK indian cricket team Edappadi Palaniswami பிரதமர் மோடி Rain விசிக பாமக PM Modi அன்புமணி ராமதாஸ் Tamilaga Vettri Kazhagam Anbumani Ramadoss தமிழ்நாடு Rajinikanth Ajith VCK தவெக விஜய் செங்கோட்டையன் IMD வேட்டையன் Udhayanidhi Stalin TVK Vijay இந்தியா GetOut Stalin நடிகை கஸ்தூரி ராமதாஸ் காங்கிரஸ் அமரன் rain Ind vs Nz திமுக அரசு திருச்செந்தூர் வானிலை Ramadoss M.K. Stalin Vettaiyan மதுரை Sengottaiyan கைது நயினார் நாகேந்திரன் ரஜினிகாந்த் Tirunelveli திருநெல்வேலி GetOut Modi டிடிவி தினகரன் விடுமுறை கோலிவுட் தனுஷ் Heavy Rain