Tamil News & polling
சென்னை,
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த சத்தியசீலன்-சித்ரா தம்பதியினர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் சீட்டுப் பணம் வசூலித்து வந்துள்ளனர். இவர்கள் சமீபத்தில் ‘தீபாவளி சீட்டு’ என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளனர். ஒவ்வொரு சீட்டுக்கும் 2 கிராம் தங்க காசு வழங்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதனை நம்பி ஏராளமானோர் சீட்டுப் பணம் கட்டியுள்ளனர். இந்த நிலையில், சத்தியசீலன்-சித்ரா தம்பதி, தாங்கள் சொன்னபடி தங்க காசு தராமல் ரூ.8 கோடி பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சத்தியசீலன்-சித்ரா தம்பதியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்க போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் போலியான சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


விஜய் Vijay DMK Chennai சென்னை TVK தவெக திமுக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக தமிழக வெற்றிக் கழகம் கனமழை திருமாவளவன் Tamil Nadu எடப்பாடி பழனிசாமி BJP TTV Dhinakaran ADMK MK Stalin AIADMK சீமான் தமிழ்நாடு Thirumavalavan மு.க.ஸ்டாலின் செங்கோட்டையன் Sengottaiyan வடகிழக்கு பருவமழை AMMK முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss Seeman டிடிவி தினகரன் வானிலை ஆய்வு மையம் Tamilaga Vettri Kazhagam Edappadi Palaniswami PMK VCK