Tamil News & polling
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என அந்த மாநிலத்தின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் தேசப்பற்று அதிகரிக்கும் என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பாரத மாதாவை எதிர்ப்பவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அதிகாலை அசெம்ப்ளி கூட்டத்தின்போது ‘வந்தே மாதரம்’ பாடப்படுகிறது. அந்த வகையில் அலிகார் மாவட்டத்தில் உள்ள குதூப் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், காலை நேரத்தில் நடைபெறும் அசெம்ப்ளி கூட்டத்தின்போது ‘வந்தே மாதரம்’ பாடலை பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி அனைவரும் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடிய நிலையில், ஷம்சுல் ஹாசன் என்ற ஆசிரியர் மட்டும் ‘வந்தே மாதரம்’ பாட மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் அவர் முறையிட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சக ஆசிரியர்களுடன் ஷம்சுல் ஹாசன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி ராகேஷ் குமார் சிங்கிடம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுஷ்மா ராணி புகார் அளித்தார். இந்த புகார் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ‘வந்தே மாதரம்’ பாடுவது தங்கள் மத கோட்பாட்டிற்கு எதிராக உள்ளது என்று ஷம்சுல் ஹாசன் கூறியதாக தலைமை ஆசிரியர் சுஷ்மா ராணி தெரிவித்தார்.
இதையடுத்து ஆசிரியர் ஷம்சுல் ஹாசனை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் உத்தரவிட்டார். அதே சமயம், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஆசிரியர் ஷம்சுல் ஹாசன் மறுத்துள்ளார். ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்பாக மாணவர்களின் பெற்றோரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற மட்டுமே கூறியதாகவும், சக ஆசிரியர்களுடன் மோதலில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!
நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த
கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை
ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஒரு ரூபாய் கேட்டு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம்
விஜய் Vijay TVK DMK தவெக திமுக சென்னை அதிமுக அண்ணாமலை கனமழை தமிழக வெற்றிக் கழகம் Chennai Annamalai திருமாவளவன் MK Stalin ADMK Tamil Nadu பாஜக AIADMK தவெக மாநாடு Thirumavalavan சீமான் எடப்பாடி பழனிசாமி இந்திய அணி BJP முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை தீபாவளி Seeman Tamilaga Vettri Kazhagam செங்கோட்டையன் தமிழ்நாடு indian cricket team TVK Conference தமிழக வெற்றிக்கழகம் வானிலை ஆய்வு மையம் TTV Dhinakaran Sengottaiyan AMMK மு.க.ஸ்டாலின் Northeast Monsoon PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss மழை காங்கிரஸ் தென்காசி பிரதமர் மோடி பாமக தவெக விஜய் VCK நயினார் நாகேந்திரன் Congress Edappadi Palaniswami Tirunelveli அமரன் GetOut Stalin Thoothukudi வானிலை உதயநிதி ஸ்டாலின் தமிழகம் விசிக பாலியல் தொல்லை மதுரை விடுமுறை TVK Vijay நடிகை கஸ்தூரி IMD திருச்செந்தூர் GetOut Modi திருநெல்வேலி Heavy Rain டிடிவி தினகரன் இந்தியா கோலிவுட் சட்டசபை தேர்தல் rain Ind vs Nz M.K. Stalin தூத்துக்குடி Ajith வாஷிங்டன் சுந்தர் Nainar Nagendran Washington Sundar கைது தனுஷ் திமுக அரசு