INDIAN 7

Tamil News & polling

கோவையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

By E7 Tamil 14 நவம்பர் 2025 02:50 AM
Nature

கோவை விமான நிலையம் அருகே இரவு நேரத்தில் 21 வயதான கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), அவருடைய தம்பி கார்த்தி என்ற காளீஸ்வரன் (20), தவசி (20) ஆகியோர் காதலனை அரிவாளால் வெட்டி, மாணவியை தூக்கிச்சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், கார்த்தி, தவசி ஆகிய 3 பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில் காலில் படுகாயம் அடைந்த அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவியும், வெட்டுக்காயம் அடைந்த அவருடைய காதலனும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் 2 பேரும் குணமடைந்தனர்.

இதையடுத்து கல்லூரி மாணவி மற்றும் அவருடைய காதலன் ஆகியோர் தங்களின் வீடுகளுக்கு திரும்பினர். அதுபோன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தவசி, சதீஸ் ஆகியோர் குணமடைந்ததால் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கார்த்தி என்ற காளீஸ்வரனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கல்லூரி மாணவி, அவருடைய காதலனுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கார்த்திக்கு சிகிச்சை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே அடையாள அணிவகுப்பு நடத்தப்படும். அதன்பிறகு 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிப்போம். இந்த வழக்கில் கைதான 3 பேருக்கும் கோவில்பாளையத்தில் நடந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி விசாரித்த பிறகு முழு விவரமும் தெரியவரும் என்றனர்.

கோவையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்1



Whatsaap Channel


Image லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியரிடம் நூதன முறையில் ரூ.47 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா..? தொண்டர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா..? தொண்டர்களிடையே அதிகரிக்கும்


பீகாரில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

பீகாரில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று வாக்கு


ரஜினி - கமல் இணையும் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி

ரஜினி - கமல் இணையும் படத்திலிருந்து விலகிய


உத்தர பிரதேசம்: வந்தே மாதரம் பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

உத்தர பிரதேசம்: வந்தே மாதரம் பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்


ஆட்சியை பிடிப்பது யார்..? - பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை

ஆட்சியை பிடிப்பது யார்..? - பீகாரில் நாளை வாக்கு



Tags

விஜய் DMK Vijay TVK திமுக அதிமுக தவெக சென்னை கனமழை Chennai பாஜக ADMK அண்ணாமலை வடகிழக்கு பருவமழை திருமாவளவன் Northeast Monsoon Annamalai எடப்பாடி பழனிசாமி BJP தமிழக வெற்றிக் கழகம் தீபாவளி சீமான் தவெக மாநாடு MK Stalin AIADMK வானிலை ஆய்வு மையம் Thirumavalavan Seeman தமிழக வெற்றிக்கழகம் PMK Tamil Nadu TVK Conference முக ஸ்டாலின் மழை TTV Dhinakaran இந்திய அணி AMMK தமிழக அரசு மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் indian cricket team Edappadi Palaniswami செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam பாமக Rain Udhayanidhi Stalin IMD தவெக விஜய் காங்கிரஸ் பிரதமர் மோடி PM Modi rain Anbumani Ramadoss தமிழ்நாடு VCK அன்புமணி ராமதாஸ் இந்தியா Ajith TVK Vijay கைது ராமதாஸ் அமரன் Tirunelveli GetOut Stalin Ind vs Nz வானிலை விசிக Sengottaiyan நடிகை கஸ்தூரி Heavy Rain M.K. Stalin Rajinikanth தமிழகம் கோலிவுட் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் GetOut Modi தனுஷ் விடுமுறை திருச்செந்தூர் Diwali டிடிவி தினகரன் தென்காசி Ramadoss மதுரை