INDIAN 7

Tamil News & polling

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

18 நவம்பர் 2025 12:27 AM | views : 190
Nature

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தாயார் வெளிமாநிலத்தில் உள்ளார். இந்த நிலையில் சிறுமியின் தாயார், தனது தோழியை தொடர்பு கொண்டு தனது குடும்பத்துக்கு பணம் தேவைப்படுகிறது. எனது மகளிடம் நகையை கொடுத்து விடுகிறேன். எனக்கு பணத்தை பெற்று கொடு என கூறியதாக தெரிகிறது.

அதன்படி மாணவி 4 கிராம் நகையை எடுத்துகொண்டு இரும்புலியூரில் உள்ள தாயாரின் தோழி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தாயாரின் தோழி இல்லாததால் அவரது கணவரான தச்சுத்தொழிலாளி சங்கர் என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது பிளஸ்-2 மாணவிக்கு சங்கர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டு கத்தினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியிடம் விசாரித்தனர். அழுதபடியே அங்கிருந்து சிறுமி வீட்டுக்கு புறப்பட்டார். வழியில் மாணவி மருந்து கடைக்கு சென்று மாத்திரைகளை வாங்கி தின்றதாக தெரிகிறது. இதையடுத்து தாம்பரம் அருகே சென்றுகொண்டிருந்த சிறுமி திடீரென சாலையில் மயங்கி விழுந்தார்.

வாகன ஓட்டிகள் அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் மாணவி கையில் வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி பார்த்தபோது தனது தாயாரின் தோழி கணவர் பாலியல் தொந்தரவு செய்தது குறித்து எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, சென்னை வடபழனியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நேற்று இரவு ஆங்கில புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் மாணவி தனது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டில்

Image சென்னை, சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் மற்றும் சிறை கைதிகள் சிறப்பு

Image சென்னை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால்

Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.

Image சென்னை, சென்னையில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி, வணிகம், தொழில் ரீதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து வந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் விழாக்காலங் களிலும்,

Image திமுக அரசு அளித்த வாக்​குறு​திப்​படி, பணி நிரந்​தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஐகோர்ட்டு உத்​தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு செய்த மேல்​முறையீட்டை கைவிட வேண்​டும் உள்​ளிட்ட

Image சென்னையில் எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய 3 நூல்களை வெளியிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக விளங்குகிறது. திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிகிறது. அவர்களுக்கு எரிய

Image தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து தாறுமாறாக ஏற்றம் கண்டது. கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து இமாலய உச்சத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்