Tamil News & polling
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலபுரகி (மாவட்டம்) அருகே கல்லஹங்கரகா கிராமத்தை சேர்ந்தவர் குண்டேராவ் நீராலு (வயது 45), விவசாயி. இவரது மகள் மஞ்சுளா (17). இந்த சிறுமி கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.
குண்டேராவ் நீராலுக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மஞ்சுளா நேற்று முன்தினம் தூக்கில் பிணமாக தொங்கினாள். அவளது தந்தை, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். மேலும் சம்பவம் பற்றி அவர் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர் எழுதி வைத்திருந்ததாக ஒரு கடிதத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கடிதத்தை அவள் தூக்கில் தொங்கிய அறையில் போலீசார் கைப்பற்றினர். அதில், தனது தற்கொலைக்கு பக்கத்து வீட்டுக்காரர் தான் காரணம். அவர் நிலத்தகராறில் தினமும் தகராறு செய்து மனரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால் கால் ஊனமுற்ற சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது எப்படி? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவம் பற்றி போலீசார் சிறுமியின் தந்தையிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் தந்தை குண்டேராவ் நீராலு முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதில், குண்டேராவ் நீராலுவுக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அவர் தான் பெற்றெடுத்த மகளை கொன்றுவிட்டு, பக்கத்து வீட்டுக்காரர் நிலத்தகராறில் ஈடுபட்டு வருவதால் மனவேதனையில் மஞ்சுளா தற்கொலை செய்ததாக கூறி பக்கத்து வீட்டுக்காரரை போலீசில் சிக்க வைத்துவிடலாம் என திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று வீட்டில் வேறுயாரும் இல்லாத சமயத்தில் தான் பெற்றெடுத்த மகள் என்று கூட பாராமல் மாற்றுத்திறனாளியான மஞ்சுளாவை தூக்கில் தொங்கவிட்டு துடிக்க துடிக்க கொன்றுள்ளார். பின்னர் மஞ்சுளா எழுதியது போல் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அதிரடி கருத்து: இந்துக்கள் இல்லேன்னா உலகமே இல்லையாம்!
கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு செய்யப்போறாரு நம்ம முதல்வர் ஸ்டாலின்!
மேகதாது அணை விவகாரம்: விவசாயிகளின் அச்சத்தைப் போக்க அரசின் நடவடிக்கை!- அன்புமணி
விஜய்ய பாக்க ஆசையா? நாளைக்கு பாக்கலாம்! 2 ஆயிரம் பேருக்கு மட்டும் தான்
மக்கள் சந்திப்பு கூட்டம்- விஜய் எடுத்த புதிய
விஜய் Vijay DMK TVK தவெக திமுக அதிமுக சென்னை பாஜக கனமழை திருமாவளவன் அண்ணாமலை Chennai ADMK BJP MK Stalin Annamalai தமிழக வெற்றிக் கழகம் தீபாவளி சீமான் Thirumavalavan வடகிழக்கு பருவமழை Tamil Nadu தவெக மாநாடு AIADMK எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon இந்திய அணி வானிலை ஆய்வு மையம் Seeman முக ஸ்டாலின் indian cricket team TVK Conference தமிழக வெற்றிக்கழகம் TTV Dhinakaran மு.க.ஸ்டாலின் AMMK PMK பிரதமர் மோடி உதயநிதி ஸ்டாலின் Rain செங்கோட்டையன் மழை Tamilaga Vettri Kazhagam தமிழக அரசு அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு காங்கிரஸ் VCK Udhayanidhi Stalin பாமக தவெக விஜய் Edappadi Palaniswami PM Modi நடிகை கஸ்தூரி விசிக பாலியல் தொல்லை Ind vs Nz மதுரை விடுமுறை TVK Vijay Sengottaiyan வானிலை அமரன் Tirunelveli இந்தியா நயினார் நாகேந்திரன் கைது IMD GetOut Stalin தனுஷ் rain வாஷிங்டன் சுந்தர் Heavy Rain Washington Sundar ராமதாஸ் திருச்செந்தூர் GetOut Modi கோலிவுட் Ajith தென்காசி M.K. Stalin தமிழகம் Nainar Nagendran Congress திருநெல்வேலி டிடிவி தினகரன் திமுக அரசு