Tamil News & polling
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே அக்கட்சியில் உள்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் பிரச்சினை வெளியே தெரியவில்லை.
முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். ஆனால், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்த பிறகு, உள்கட்சி பூசல் வெளிச்சத்துக்கு வந்தது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டார். கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். ஆட்சியில் இருக்கும்போதே சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனும் அதிருப்தியில் இருந்து வந்தார். அவரது சொந்த மாவட்டமான ஈரோட்டில் கட்சிப் பதவியில் இருந்த கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை நியமித்தார்.
இதனால், கடும் அதிருப்திக்கு உள்ளான கே.ஏ.செங்கோட்டையன், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். இதனால், கட்சிப் பதவி பறிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் விதித்ததால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில்தான், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றிணைந்து, அங்கு வந்த டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.
அவர்கள் அனைவரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்கு செவிமடுக்கவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் இதே கருத்தை வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.
இந்த நிலையில், தொடர்ந்து மவுனம் காத்து வந்த கே.ஏ.செங்கோட்டையன் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, வரும் 27-ந் தேதி தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார். இந்த தகவலை அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
அதே நேரத்தில், அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மற்றொரு நிர்வாகியான ஓ.பன்னீர்செல்வமும் டிசம்பர் 15-ந் தேதி வரை எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். அதன்பிறகு, அவர் புதிய கட்சி தொடங்குவாரா? அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா? என்பது தெரியவரும்.
கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்தின் புதிய நிலைப்பாடு தமிழக அரசியலை அதிரச் செய்துள்ளது.

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? அசோக் தன்வார் என்ன சொல்லியிருக்காருன்னு
பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை! 🚨 உடனே
தென்காசி அருகே பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடையநல்லூர் அருகே கோர விபத்து: பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 6
டெல்லி கார் வெடிப்பு: பயங்கரவாதிகளின் சதித்திட்டம் அம்பலம்! 💣 உடனே
விஜய் Vijay DMK TVK தவெக திமுக அதிமுக கனமழை சென்னை Chennai அண்ணாமலை திருமாவளவன் பாஜக தமிழக வெற்றிக் கழகம் ADMK Annamalai MK Stalin BJP Tamil Nadu Thirumavalavan தீபாவளி சீமான் AIADMK எடப்பாடி பழனிசாமி தவெக மாநாடு வடகிழக்கு பருவமழை இந்திய அணி Seeman முக ஸ்டாலின் indian cricket team வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் TTV Dhinakaran TVK Conference மு.க.ஸ்டாலின் Northeast Monsoon Rain AMMK பிரதமர் மோடி தமிழ்நாடு PMK Tamilaga Vettri Kazhagam அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் Anbumani Ramadoss செங்கோட்டையன் மழை உதயநிதி ஸ்டாலின் VCK தமிழக அரசு தவெக விஜய் பாமக Edappadi Palaniswami தென்காசி Udhayanidhi Stalin PM Modi GetOut Stalin விடுமுறை Sengottaiyan கைது நடிகை கஸ்தூரி நயினார் நாகேந்திரன் பாலியல் தொல்லை மதுரை Tirunelveli விசிக TVK Vijay அமரன் வானிலை Congress IMD திருச்செந்தூர் Ind vs Nz இந்தியா திமுக அரசு GetOut Modi வாஷிங்டன் சுந்தர் Ajith கோலிவுட் தூத்துக்குடி Nainar Nagendran தனுஷ் திருநெல்வேலி Heavy Rain Washington Sundar rain Thoothukudi M.K. Stalin தமிழகம் டிடிவி தினகரன்